அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரண்டரை லட்சத்தை கடந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 21, 2024

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரண்டரை லட்சத்தை கடந்தது

featured image

சென்னை,மார்ச் 21- தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 2024-2025ஆம் கல்வியாண்டுக் கான மாணவர் சேர்க்கை கடந்த 1.3.2024 முதல் நடைபெற்று வருகிறது.
வழக்கத்தைவிட ஒரு மாதத்துக்கு முன்பாகவே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்கிறது.

இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 4 லட்சத் துக்கு மேல் மாணவர் சேர்க்கை இலக்கை கொண்டு பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது.
வரும் கல்வியாண்டில் இருந்து தனியார் பள்ளி களுக்கு நிகராக உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள் என பல்வேறு வசதிகளை அரசுப் பள்ளிகளில் கொண்டு வர இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், அரசுப் பள்ளி மாணவர் களுக்கு என்ன மாதிரி யான நலத் திட்டங்கள் கிடைக்கும்? அவர்களின் கல்வித் தரத்தை மேம் படுத்த அரசின் திட்டங் கள், அவர்களின் திறனை வளர்க்க உள்ள விவரங் கள் உள்பட பல்வேறு தகவல்களை விழிப்பு ணர்வு ஏற்படுத்தி மாண வர் சேர்க்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 1ஆம் தேதி முதல் 19.3.2024 தேதி வரைஅரசு பள்ளிகளில் 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாணவர்கள் சேர்ந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரி விக்கின்றன.

வருகிற 30ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் நிலையில், பள் ளிக் கல்வித் துறையின் இலக்கான 4 லட்சத்தை எட்டிவிடும் என்று அதி காரிகள் தெரிவிக்கின் றனர்.

No comments:

Post a Comment