பாடத்திட்டங்களில் கலைஞரின் சமூக நீதி வரலாறு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 12, 2023

பாடத்திட்டங்களில் கலைஞரின் சமூக நீதி வரலாறு

அமைச்சர் க.பொன்முடி தகவல்

சென்னை, ஜூலை 12- அனைத்து பள்ளிகளிலும், கல் லூரிகளிலும் கலைஞரின் சமூக நீதி வரலாறு, பாடத் திட்டமாக இணைக்கப்படும் என்று அமைச்சர் க.பொன் முடி கூறினார்.

சென்னை தலைமை செயல கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, 'சமூக நீதி காவலர் கலைஞர்' என்ற தலைப்பில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தலை மையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் பத்திரி கையாளர்களுக்கு அமைச்சர் க.பொன்முடி அளித்த பேட்டி வருமாறு:-

பொறியியல் படிக்கும் மாண வர்களுக்கு படிக்கும் போதே தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஏற் கெனவே முதலமைச்சர் குறிப் பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து கோவை அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு 'வால்மார்ட்' நிறு வனம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், உயர் கல்வித்துறை என முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. 

இம்மாதம் 21ஆம் தேதியில் இருந்து இந்த பயிற்சி தொடங் கப்பட உள்ளது. மற்ற கல்லூரிக ளுக்கும் இவை போன்ற தொழிற்பயிற்சி விரிவுபடுத்தப் படும். இதன் மூலம் மாணவர் களுக்கு வேலைவாய்பை பெறும் திறன் அதிகரிக்கும். தற்போது தகவல் தொழில்நுட்ப துறை யிலும், கணிப்பொறி துறையி லும் பயிற்சி அளிக்கப்பட உள் ளது.

பொறியியல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட்டு கல் லூரிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். 4 கட்டங்களாக நடைபெறும் கலந்தாய்வு எண் ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பொறியியல் கல்வியில் சேர்ந்துவிட்டு, பின்னர் மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்களின் காலியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பெரும் பாலான பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பற்றாக்குறை இருப் பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார்.

அதுபோன்ற நிலை இல்லை. ஒன்றிரண்டு இடங்களில் இருக் கும் பற்றாக்குறையை நிரப்பும் பணிகளை அந்தந்த பல்கலைக் கழகங்கள் மேற்கொண்டு வரு கின்றன. மாநில கல்விக் கொள் கையை அமைப்பதற்கான பணி கள் நடைபெற்று வருகின்றன. அதற்கான அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும்.

சமூக நீதிக்காக மறைந்த மேனாள் முதலமைச்சர் கலை ஞர் கருணாநிதி ஆற்றிய தொண்டு கள் பற்றி சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், மாண வர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத் தோடுதான் சமூக நீதி குழுவை, 'சமூக நீதி காவலர் கலைஞர்' என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி யிருக்கிறார்.

கலைஞர் கருணாநிதியை பொறுத்தவரை, சட்ட ரீதியாக இருந்தாலும், சமூக ரீதியாக இருந்தாலும் சமூக நீதிக்காக போராடியது சாதாரணம் ஆனதல்ல. 

அவரைப் பற்றி எல்லா மாணவர்களிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும் என்று பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அனைத்து கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் கலைஞரின் சமூக நீதி வரலாறு, பாடத் திட்டமாக இணைக்கப்படும்.

மேலும், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையிடம் ஆலோசிக்கப்படும். அதற்கான பாடப்புத்தகங்களும் உருவாக் கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

கல்லூரிகள், பள்ளிகளில் இது சம்பந்தப்பட்ட கட்டு ரைப் போட்டி, கவிதைப் போட்டிகளை எடுத்துச்செல்ல வேண்டும் என்றும், அனைத்து கல்லூரிகளிலும் ஆங்கிலத் திலும், தமிழிலும் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என் றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சமூகநீதி தத்துவத்தை பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். 

பெண்ணுரிமை, மாற்றுத் திறனாளிகளுடைய உரிமை அனைத்தையும் இணைத்து இளைஞர்களுக்கு அதை தெரிவிக்க வேண்டும். அவர்கள் இந்த வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அனைவரும் ஒரு முடிவை எடுத்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

அமைச்சர் க.பொன்முடி தலைமையில் அமைக்கப் பட்டுள்ள சமூகநீதி காவலர் கலைஞர் குழுவில் இடம் பெற்றுள்ள தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வனத்துறை அமைச்சர் மதி வேந்தன் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.

No comments:

Post a Comment