Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பெரியார் விடுக்கும் வினா! (901)
கடவுளை நம்பாதவர்களும், கடவுள் மீது எவ் விதப் பொறுப்பும் போடாதவர்களுமாயிருக் கிறவர் களும், கடவுள் உணர்ச்சியை ஒழித்துக் கொண்டவர் களுமான மக்கள் உள்ள நாட்டில் - ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை உடையவர்களாகவே காணப்படு வதால் "நாளைக்கு என்ன கதி" என்கின்ற பேச்சு உண்டா? - தந்தை பெரியார்,  'பெரியார் க…
February 04, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (900)
கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்கின்ற கருத்தை மக்களிடையே உண்டாக்கி அவர்களுக்கு அறிவுத் தெளிவை உண்டாக்குவதை விட உலகில் சீவகாருண்யத் தன்மை வேறு இருக்கின்றதா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
February 03, 2023 • Viduthalai
பெரியார் விடுக்கும் வினா! (899)
மக்களுக்கு அறிவும் ஆராய்ச்சியும் வளர வளரக் கடவுள் உணர்ச்சியின் அளவு குறைந்து கொண்டே போகுமல்லவா? அதுபோலவே, அறிவும் ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதை யும் ஒப்புக் கொள்ளத்தானே வேணும்? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
February 01, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (898)
படிப்புக்கும் புத்திக்கும்தான் சம்பந்தமில்லை என்று தெளிவாகி விட்டிருக்கிறதே? படிப்பு எல்லாம் தனிக் கலையாகி விட்டது. கலைகளெல்லாம் ஒழுக்கத்திற்குச் சம்பந்தம் அற்றதாகி விட்டதா - இல்லையா? அயோக்கியர் களும், வஞ்சகர்களும் கலைஞர்களாகி விட்டார்கள், படித்தவர்களில் அயோக்கியர்களே அதிகமாகி விட்டார் களே, இவர்களை…
January 31, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (898)
இன்றைக்கு ஆசிரியர்களுக்குச் சம்பளம் பெறுவது தான் முக்கியமாக இருக்கிறதே ஒழிய பையன்களைப் படிப்பிப்பதில், நல்வழிப்படுத்துவதில் அதிக கவனம், அக்கறை உண்டா? இந்நிலை மாற வேண்டாமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
January 30, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (897)
சில காரியங்களில் மக்கள் பொய் சொல்லியாக வேண்டும். சில காரியங்களில் மக்கள் அயோக்கியர்களாக ஆகித் தீர வேண்டும். சில காரியங்களில் மக்கள் முட்டாள் களாக ஆகித் தீரவேண்டும். அது போலவே கடவுள் விசயத்தில் மக்கள் இம் மூன்றுமாக ஆகித் தீர வேண்டியுள்ளது - இல்லையா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொ…
January 29, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (896)
கடவுளை வணங்குகிறவனைக் காட்டுமிராண்டி என்பதால் மனம் புண்படுகிறது என்கின்றான். கடவுளை வணங்காதவனைப் பற்றி அவன் சொல்வது மட்டும் நம் மனதைப் புண்படுத்தவில்லையா? சிறீரங்கத்தைப் (திருச்சி யில் உள்ள) பற்றிச் சொல்லும்போது, "பொன்னரங்கம் போற்றாதார் புலையராமே" என்று பாடி இருக்கிறான். சிறீரங்கத்தில் இர…
January 28, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (895)
கடவுளையும், மதத்தையும் உண்டாக்கி, காப்பாற்றிப் பிரச்சாரம் செய்து வருகின்ற, கடவுளுக்குச் சமமான ஜாதி என்கிற பார்ப்பனர்களுக்கே அவர்கள் உண்டாக்கிய கடவுளும், மதமும் பயன்படாமல், அவர்களைக் கொலை ஜாதியாக ஆக்கிவிட்டதென்றால், அவை மற்றவர்க்கு அன்பு, ஒழுக்கம் உண்டாகப் பயன்படுமா? - தந்தை பெரியார்,  'பெரியார்…
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (894)
சமுதாயத் திருத்தக்காரன் என்ற முறையில் நான் ஒரு பற்றும் அற்ற நிலையில் மனிதப் பற்று ஒன்றையே கொண்டு தொண்டாற்றுகின்றேன். சமுதாயச் சீர்திருத்தப் பணிக்கு மிகத் துணிவுள்ளவன்தான் வர முடியும். அவனுக் குக் கடவுள், மத, சாத்திர நம்பிக்கை இருக்குமானால், இதுகள் மீது பக்தி வைத்துக் கொண்டு சமுதாயத்தைத் திருத்த முட…
January 26, 2023 • Viduthalai
பெரியார் விடுக்கும் வினா! (893)
கடவுள் கற்பனை செய்யப்பட்டுப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டாலும், கடவுள் என்பதற்கு அர்த்தமும், குறிப்பும், குளறுபடியில்லாமல் தெளிவு பட உணந்தவர் - உணர்த்தியவர் எவரையாவது இன்றளவும் காட்ட முடியவில்லையே - ஏன்? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
January 25, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (892)
மனித சமூகச் சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும், சர்க்காரும் இருக்கலாமா? மனித வாழ்க்கைக்கும், பேதா பேதங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லும்படியான கடவுள் இருக்குமானால் நமக்கு என்ன கவலை? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
January 24, 2023 • Viduthalai
பெரியார் விடுக்கும் வினா! (891)
சினிமா ஒரு நோய், இந்த நோய் எல்லோரையும் பிடித்திருக்கிறது. கிழவிகளைக் கூடப் பிடித்திருக்கிற தென்றால் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல வேண் டும்? பள்ளியில் படிக்கிற சிறுமி வீட்டுக்கு வரும்போதே தெருவில் ஆடிக் கொண்டே வருகிறது. தாய், பிள்ளை எல்லோரும் சினிமாப் பைத்தியமாகத் திரிகிறார்கள். இதனால் யாருக்குக் க…
January 23, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (890)
ஆட்சி முறையை ஒழுங்காக நடத்த ஆட்சியாளர் யோக்கியமானவராக இருக்க வேண்டும்; இதற்கு ஆட்சி உத்தரவை, ஒழுங்கை, சட்டத்தை மீறுகிறவர்கள் ஆட்சிக் குத் தகுதியற்றவர்கள், தேர்தலுக்கு நிற்கத் தகுதியற்றவர்கள் என்று விதி வகுக்கப்பட வேண்டாமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
January 22, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (889)
உலகில் மனிதனுக்குத்தான் கடவுள் கற்பிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய - மனிதர்களைப் போலவே தோன்றி, வாழ்ந்து செயல்பட்டு அழிந்து மாய்ந்து போகும் மற்ற சீவராசிகளுக்கும், புல் பூண்டு தாவரங்களுக்கும் கடவுள் என்கிற உணர்ச்சி உண்டா? கடவுளைப் பற்றி நமக்கு மட்டும் என்ன கவலை? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி'…
January 21, 2023 • Viduthalai
பெரியார் விடுக்கும் வினா! (888)
ஒரே கடவுள் உள்ள கோவில்களில் ஓர் ஊர்க் கோவிலைப் பெரிதாகவும், மற்ற ஊர்க் கோவிலைச் சிறிதாகவும் மதிப்பது ஏன்? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
January 20, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (887)
அரசாட்சி என்பது எதற்கு? மக்களைக் கண்டித்துச் சரி செய்து நடத்துவதற்காகத்தானே ஏற்பட்டது. அப்படி இல்லாமல் மக்கள் இஷ்டம் போல் எல்லாம் அரசாங்கம் ஆடுவது என்றால் நாட்டில் மக்களுக்கு நலம் எப்படி விளையக்கூடும்? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
January 19, 2023 • Viduthalai
பெரியார் விடுக்கும் வினா! (886)
மனிதர்களை இரண்டு தன்மைகள் இயற்கைக்கு விரோதமாக ஆட்சி புரியலாமா? ஒன்று கடவுள்; மற்றொன்று அரசாங்கம்; இந்தக் கடவுளும், ஆட்சியும் பார்ப்பானைக் காப்பாற்ற ஏற்பட்டதல்லவா? இதை மக்கள் உணர்ந்து மாறுவது எப்போது? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
January 18, 2023 • Viduthalai
பெரியார் விடுக்கும் வினா! (885)
நம் நாட்டை - தமிழ்நாட்டை நம் நாட்டவன் அல்லாத எவரும் ஆளலாமா? நமது மொழிக்காரன் அல்லாத எவரும் ஆளலாமா, நமது இனத்தவன் அல்லாத வேறு எவரும் ஆளலாமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
January 17, 2023 • Viduthalai
பெரியார் விடுக்கும் வினா! (884)
தமிழர்களில் உள்ள செல்வவான்கள் தாங்கள் எப்படி யெல்லாம் தேடிய பொருளைத் தமிழர் சமுதாயத்துக்கு என்று ஒரு காசாவது செலவிடுகின்றார்களா? அதற்கு மாறாகத் தங்கள் சமுதாய இழிவுக்கும், வீழ்ச்சிக்கும் காரண கர்த்தர்களாகிய தங்களது எதிரிகளுக்கும் பயன்படும்படி யாக செலவழித்து இனத் துரோக செயலை செய்வதா? - தந்தை பெரியார்…
January 14, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (882)
சாமி திருடுவதை உற்சவமாகக் கொண்டாடு கிறார்கள். சாமியைத் தேவடியாள் வீட்டுக்கு இன்னும் அழைத்துக் கொண்டு போகிறார்கள். இதற்குத் தூது செல்பவனும் பார்ப்பான்தான். இதனால் ஒழுக்கம் வளருமா? இதற்குப் பேர் கடவுள் பக்தியா? இந்த மாதிரிப் பார்ப்பான் பேச்சைக் கேட்டு நடக்கின்ற சமுதாயம் திருந்தி முன்னேற முடியுமா? - த…
January 12, 2023 • Viduthalai
Image
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn