சமூகத்தில் பிரிவினையை தூண்டும் சேனல்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 18, 2023

சமூகத்தில் பிரிவினையை தூண்டும் சேனல்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பு

புதுடில்லி, ஜன. 18- வடஇந் தியாவை சேர்ந்த சுதர்சன் நியூஸ் என்ற தொலைக் காட்சி சேனல், யுபிஎஸ்சி ஜிகாத் என்ற பெயரில் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்து வருகிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன் றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

இதேபோல அரசியல் தலைவர்களின் வெறுப்பு ணர்வை தூண்டும் கருத் துகள், சமூக வலைதளங் களில் பிரிவினையை தூண்டுவது உள்ளிட் டவை தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய் யப்பட்டுள்ளன. இவை ஒரே வழக்காக விசாரிக்கப் படுகிறது. இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப், நீதிபதி நாகரத்னா அமர்வு முன்பு நேற்று (15.1.2023) முன்தினம் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப் பில் நிசாம் பாஷா உள் ளிட்ட வழக்குரை ஞர்கள் ஆஜராகினர். அவர்கள் கூறும் போது, “தொலைக் காட்சி சேனல்கள் வெறுப்புணர்வு, பிரிவினையை தூண்டும் வகையில் நிகழ்ச்சி, செய்திகளை ஒளிபரப்பு செய்துவருகின்றன. இதை தடுக்க கேபிள்டிவி ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டும். வெறுப்பு ணர்வை தூண்டும் வகை யில் பேசுவதை தடுக்க குற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தங் களை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

ஒன்றிய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட ராஜ் ஆஜராகி வாதிட் டார். அவர் கூறும்போது, “ஊடகங்கள் சுயகட்டுப் பாட்டை பின்பற்றி வரு கின்றன. தேசிய நலன், தேசத் தின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும்போது ஒன்றிய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக் கிறது. அரசியல் தலைவர்கள் வெறுப்புணர்வை தூண் டும் வகையில் பேசுவதை தடுக்க சட்டத்தில் திருத் தங்களை செய்வது குறித்து அரசு ஆலோசித்து வரு கிறது. இதுதொடர்பான சட்ட திருத்த மசோதா குறித்து நாடாளுமன்றம் முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்.

இந்த வழக்கு விவகா ரத்தில் மூத்த வழக்குரை ஞர் சஞ்சய் ஹெக் டேவை மத்தியஸ்தராக உச்சநீதி மன்றம் நியமித்துள்ளது. தொலைக் காட்சி சேனல் மற்றும் வெறுப் புணர்வை தூண்டும் வகை யில் பேசு வதை தடுக்க சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்வது தொடர் பாக 5 பக்க பரிந்துரைகளை அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

இதன்பிறகு நீதிபதி கள் ஜோசப், நாகரத்னா கூறியதாவது: 

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசு வது மிகப்பெரிய பிரச்சி னையாக உருவெடுத் துள்ளது. இதை தடுக்க குற்றவியல் நடை முறை சட்டத்தில் திருத்தங் களை செய்ய வேண்டும். பல்வேறு விவகாரங்களில் தொலைக்காட்சி சேனல் கள் சமூகத்தில் பிரிவி னையை தூண்டி வருகின் றன. அச்சு ஊடகங்களுக் காக பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா என்ற அமைப்பு உள்ளது. மின்னணு ஊட கங்களுக்காக இதே போன்ற அமைப்பை உரு வாக்க ஒன்றிய அரசு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை.

ஏர் இந்தியா விமான பயணத்தில், பயணி ஒரு வர் சிறுநீர் கழித்த விவ காரம் தொடர்பான வழக் கில் தொலைக்காட்சி ஊடகங்கள் தனித்தனி யாக விசாரணை நடத்தி வருகின்றன. குற்றம் சாட் டப்பட்டுள்ள நபர், விசா ரணைக் கைதி. அதற்கு முன்பே அவரை ஊட கங்கள் குற்றவாளியாக சித்த ரித்து வருவது எந்த வகையில் நியாயம்? சர்ச்சைக்குரிய வகையில் விவாதங்களை நடத்தும் தொகுப் பாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக் கப்படுகிறது? 

தொலைக்காட்சி சேனல்கள் நடுநிலை யோடு செயல்பட வேண் டும். இவ்வாறு நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித் தனர். 

வழக்குகள் தொடர் பாக பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநில அரசு களுக்கும் தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத் தர விட்டனர்.

No comments:

Post a Comment