கொல்கத்தா, ஜன. 18- இந்தியாவின் மிகப் பழைமையான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. மேற்குவங்க தலைநகர் கொல்கத்தா அருகே பெர்ஹாம்பூர் அமைந்துள்ளது. அங்கு பெர் ஹாம் பூர் பேங்க் லிமிடெட் என்ற பெயரில் தனியார் வங்கி செயல்பட்டு வந்தது. வங்கி வாடிக்கை யாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், இந்த வங்கியை மூட கடந்த 1951ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து வங்கி நிர்வாகம் சார்பில் அதே ஆண்டில் கொல்கத்தா உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. வங்கி நிர்வாகத்துக்கும் வாடிக்கையாளர் களுக்கும் இடையே மிக நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடை பெற்றது. வழக்கை தொடர்ந்த வங்கி நிர்வாகிகள் மற்றும் வாடிக் கையாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் தலைமை நீதிபதி பிரகாஷ் சிறீவஸ்தவா அமர்வு முன்பு வழக்கு விசார ணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், எதிர்தரப்பு சார்பில் யாரும் ஆஜராகவில்லை. மிக நீண்ட கால மாக வழக்கில் யாரும் ஆஜரா காததால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வழக்கு முடித்து வைக்கப் பட்டது. இதுகுறித்து மூத்த வழக்குரைஞர்கள் கூறும்போது, “72 ஆண்டுகளாக நீடித்து வந்த நாட் டின் மிகப் பழைமையான பெர்ஹாம்பூர் வங்கி வழக்கு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தின் மால்டா நீதிமன்றத்தில் 2 பழைமை யான வழக்குகளும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பழை மையான வழக்கும் நிலுவையில் உள் ளன" என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment