(ஈரோடு முதல் கடலூர் வரை
ஒரு நாளைக்கு இரண்டு கூட்டங்கள்)
(2023 பிப்ரவரி 3 முதல் மார்ச் 10 வரை)
மாவட்டக் கழக பொறுப்பாளர்கள்
செய்ய வேண்டிய ஏற்பாடுகள்
1. ஒவ்வொரு கூட்டத்திற்கும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை என நேரம் குறிப்பிட்டு காவல் துறை அனுமதி பெற வேண்டும்
2. துண்டறிக்கை, விளம்பர சுவரொட்டிகள்,
உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம், சுவர் எழுத்து உட்பட அனைத்து விளம்பரங்களையும் செய்திட வேண்டும்.
3.ஒவ்வொரு கூட்டத்திற்கும் தனி மேடை, ஒளி, ஒலி அமைப்பு ஏற்பாடு செய்தல்.
4. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்கும் இடம் மற்றும் கூட்ட ஏற்பாடுகள் குறித்து பயண ஒருங்கிணைப்பாளர்களுக்கு முன்கூட்டியே தெரியப் படுத்த வேண்டும்.
5. அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை தவிர வேறு எந்த நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்தல் கண்டிப்பாக கூடாது.
6.ஒவ்வொரு கூட்டத்திற்கும் பயணக்குழுவிற்கான வழிச்செலவு வழங்க வேண்டும்
7. இரவு தங்கும் ஊர்களில் 23 நபர்களுக்கு தங்கும் இடம் மற்றும் 3 வேளை உணவு ஏற்பாடு செய்தல் வேண்டும்.
8. கழகக் கொடிகளை ஏராளம் கட்டுதல் வேண்டும்.
- தலைமை நிலையம்
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment