செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 7, 2022

செய்திச் சுருக்கம்

தேர்ச்சி

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.ஆர்.எஸ். மற்றும் அய்.எஃப்.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த 110 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஆலோசனை

தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கையை அடுத்து தலைமைச் செயலாளர் இறையன்புடன், தென் மண்டல வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று (6.12.2022) அவசர ஆலோசனை நடத்தினார்.

விரைவு

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுவடையும் என்பதால் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.

கலைக்காட்சிக்கு...

மாநில அளவிலான கலைக்காட்சிக்கு ஓவியங்கள், சிற்ப புகைப்படங்களை வரும் 23ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என கலை பண்பாட்டுத் துறை அறிவிப்பு.

கண்டுபிடிப்பு

கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவியை சென்னை அய்.அய்.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உற்பத்தி

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் 6.9 சதவீதம் அளவுக்கு இருக்கும் என திருத்தியமைக்கப்பட்ட கணிப்பை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

உறுதி

அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ மாநகரத்துடன், சென்னை மாநகராட்சி இணைந்து செயல்படுவது குறித்து கலந்துரையாடல் கூட்டத்தில், இரு மாநகர மேயர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி.

தானியங்கி

ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் இயக்க ரூ.1,620 கோடிக்கு அதி நவீன சிக்னல், ரயில் இயக்க கட்டுப்பாடு பணிக்காக 2 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்.

பாராட்டு

தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணியிடம் ரூ.76 ஆயிரம் மதிப்புள்ள அய்போனை திருடிய கொள்ளையனை விரட்டிப் பிடித்த பெண் காவலர் காளீஸ்வரியை காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு நேற்று நேரில் அழைத்து பாராட்டு.


No comments:

Post a Comment