ஹிந்துக்கள் வீட்டில் கத்தி வைத்திருக்க வேண்டுமாம் பா.ஜ.க. எம்.பி., சாமியாரிணி பிரக்யா சிங் வன்முறை பேச்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 28, 2022

ஹிந்துக்கள் வீட்டில் கத்தி வைத்திருக்க வேண்டுமாம் பா.ஜ.க. எம்.பி., சாமியாரிணி பிரக்யா சிங் வன்முறை பேச்சு

விமோகா, டிச.28 ஹிந்து மதத் தினர் தங்கள் வீட்டில் கூர்மையான ஆயுதங்களை வைத்துக்கொள்ளுங்கள், ஹிந்துக்கள் கிறிஸ்தவ பள் ளியில் தங்கள் பிள்ளை களைச் சேர்க்க வேண்டாம்  என்று கூறி பெண் சாமி யாரும் போபால் நாடாளு மன்ற உறுப்பினருமான பிரக்யா சிங் தாக்கூர் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதி பாஜக நாடா ளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர். இவர் தெரிவிக்கும் கருத் துகள் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இந் நிலையில், கருநாடக மாநி லம் சிமோகா மாவட்டத் தில் இந்து மத அமைப்பான இந்து ஜகாரன வேதிகி என்ற அமைப்பு சார்பில் இன்று நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாமியாரிணி பிரக்யா சிங் தாக்கூர் பங்கேற்று பேசினார். 

அவர் பேசுகையில், ஹிந்து மதத்தினர் கூர்மை யான ஆயுதங்களை வைத் துக் கொள்ளுங்கள்.. எது வும்  இல்லையென்றால் காய் கறி வெட்டும் கத்தி யையாவது கூர்மையாக வைத்துக்கொள்ளுங்கள். எப்போது, என்ன நடக்கும் என்று தெரியவில்லை... தற் காத்துக் கொள்ள அனை வருக்கும் உரிமை உள்ளது... யாரேனும் அத்துமீறி நமது வீட்டிற்குள் நுழைந்து நம்மை தாக்கினால் பதிலடி கொடுப்பது நமது உரிமை. லவ் ஜிகாத், ஜிகாத் செய்யும் பாரம் பரியத்தை அவர்கள் கொண்டுள்ள னர்.. எதுவும் செய்யாவிட்டால் லவ் ஜிகாத்... அவர்கள் லவ் செய் தாலும் அதிலும் ஜிகாத் செய்கின் றனர். நாமும் (இந்து மதத்தினர்) காதல் செய்கிறோம், கடவுளை காதல் செய்கிறோம்... ஒரு சாமியார் தனது கடவுளை காதல் செய் கிறான். உங்கள் மகள்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள், சரியான நெறிமுறைகளை அவர் களுக்கு கற்றுக்கொடுங்கள். பெற்றோர் தங்கள் குழந்தை களை சிறு பான்மையினர் கல்வி நிறுவனங் களுக்கு அனுப்பவேண்டாம். 

அவ்வாறு அனுப்புவ தால் உங் களுக்கு நீங்களே முதியோர் இல்லத்தை திறந்து கொள்கிறீர்கள்' என்றவாறு கூறியுள்ளார்.


No comments:

Post a Comment