"தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை கட்டமைத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 28, 2022

"தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை கட்டமைத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்"

மேனாள் அய்க்கிய நாடுகள் அவை செயலாளர் புகழாரம்!

சென்னை,  டிச.28 தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியைக் கட்ட மைத்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அய்.நா.சபை பாராட்டியுள்ளது என்று வலை தளங்களில் வலம் வரும் காட்சிப் பதிவு  ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள் ளது. அந்த காட்சிப் பதிவில் கூறப் படுவதாவது:-

இந்தியாவிலும் உலக அளவி லும் தமிழ்நாடு வலுவான பாது காப்பான மாநிலமாக உள்ளது என்றும், அதனைத் திறம்பட நிர்வ கிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டுகள் எனவும், நார்வேயைச் சேர்ந்த அய்.நா.வின் மேனாள் சார்புச் செயலாளர் எரிக் சோல் ஹெய்ம் பேசிய காணொலி, வலைதளங் களில் வைரலாகி வருகிறது.கால நிலை மாற்றத்திற்கான மாநாட்டை மு.க.ஸ்டாலின் சிறப்பாக நடத்தி யிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. கரோனா காலகட்டத்தில், மக்களுக்குத் தேவையான அடிப் படை வசதிகளைச் செய்து கொடுப் பதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் எனவும், மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பான ஆட்சியைக் கட்ட மைத்து வருகிறார் எனவும் அரசியல் பிரமுகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

எவரும் எட்டாத சாதனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார் என அனைத்துக் கட்சித் தலைவர்கள் பாராட்டிப் பேசி வருகின்றனர். 'எல்லா சட்டமன்றத் தொகுதிகளுக் கும் ஏராளமான திட்டங்களை வழங்கியுள்ளார்' எனவும், இது அவரது பரந்த நோக்கைக் காட்டுகிறது எனவும் பா.ம.க கட்சியின் ஜி.கே.மணி கூறியுள்ளார்.ஒரு விடியல் ஆட்சி தற்போது நடந்து கொண்டிருக்கிறது' என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமச்சந்திரன் பாராட்டிப் பேசி யுள்ளார். 

இவ்வாறு முதலமைச்ச ராக பொறுப்பேற்ற ஒன்றரை வரு டங்களில் பல விஷயங்களைச் சாதித்த பெருமை மு.க.ஸ்டாலி னையே சாரும் என சமூக ஆர்வ லர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இவ்வாறு அந்தக் காணொலியில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment