திருப்பத்தூர், டிச. 12- திருப்பத்தூர் நகரில் டிசம்பர் 17 இல் நடைபெறவுள்ள முப்பெரும் விழா குறித்து கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிறகு இவ்விழாவின் அழைப் பிதழை திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே. சி. எழிலரசன், மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன் ஆகியோரிடம் விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு முதல் விழா அழைப்பிதழை வழங் கினார். நெல்லுபட்டு ராஜேந்திரன் உடன் இருந்தார்.
இவ்விழா ஏற்பாட்டிற்காக 10,000 ரூபாய் நிதியை தலைமை ஆசிரியர் இந்திரா காந்தியும், மாநில பகுத் தறிவாளர் துணைத் தலைவர் அண்ணா சரவணனும் இணைந்து மாவட்ட தலைவரிடம் வழங்கினார்கள்.
இக் கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட செய லாளர் பெ. கலைவாணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் ஏ. டி. சித்தார்த்தன், ஏ. டி. இந்திரஜித், தோழர் அரவிந்த் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment