பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா

திருச்சி, நவ. 12- திருச்சி பெரியார் மணி யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நாட்டு நலப்பணித்திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் 3.11.2022 முதல் 9.11.2022 வரை நடைபெற்றது.

இறுதி நாளான 9.11.2022 அன்று காலை 10.00 மணியளவில் முகாமின் சிறப்பு நிகழ்ச்சியாக, எம் பள்ளியின் மாணவத்தொண்டர்கள் 25 பேர் 1000 பனை விதைகளை கே.சாத்தனூர் ஏரிக் கரை பகுதியில் நடுதல் நிகழ்ச்சி நடை பெற்றது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தின ராக பொன்மலை கோட்ட பகுதி-4 உதவி ஆணையர் ச.நா.சண்முகம், கே.சாத்தனூர் தொழிலதிபர் கே.டி.சிவ சண்முகம், கல்விக்குழு தலைவர் மற் றும் 63ஆவது வார்டு மாமன்ற உறுப் பினர் வி.பொற்கொடி, முத்துசெல்வன்  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக உதவியாளர் ஏ.எம்.பாரூக்  நாட்டு நலப் பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவ லர் ஆர்.ராஜேந்திரன்,  பள்ளி தலை மையாசிரியை சு.பாக்கியலெட்சுமி  நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆ.உஷா ராணி மற்றும் ஏனைய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment