பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மேலாளர்: காவல்துறையினர் விசாரணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மேலாளர்: காவல்துறையினர் விசாரணை

காசியாபாத், நவ 12- உத்தரப்பிரதேசத் தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளியின் மேலாளரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். 

உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத்தில் உள்ள ஒரு பள்ளி யில் படிக்கும் மாணவியை அதே பள்ளியின் மேலாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள் ளார். குற்றம் சாட்டப்பட்ட பள்ளி யின் மேலாளர் என்பவர், பள்ளி நேரம் முடிந்ததும் மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இந்த விஷ யத்தை யாரிடமாவது சொன்னால் மோசமான விளைவுகளைச் சந் திக்க நேரிடும் என்றும் மாணவியை மிரட்டியுள்ளார். பள்ளி மேலாள ரின் அத்துமீறலால் மன உளைச்ச லுக்கு ஆளான மாணவி, நடந்த விஷயத்தை தனது தாயிடம் கூறி யுள்ளார். 

இதனைக் கேட்டு அதிர்ச்சிய டைந்த மாணவியின் தாய், உடனடி யாக இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். இதனை அறிந்த மேலாளர், தனது வீட்டில் இருந்து தலைமறைவானார். இதுதொடர் பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் மேலாளரை  தேடி வருகின்றனர். 

சாமியார் ஆதித்யநாத் முதலமைச்சர் ஆன தில் இருந்து பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக இதுவரை சாமியார் முதலமைச்சர் எந்த ஒரு கடின நடவடிக்கைகளையும் எடுக் காமல் வேடிக்கை பார்த்து வரு கிறார்

No comments:

Post a Comment