மைசூரில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டன தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 18, 2022

மைசூரில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டன தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை, நவ 18- கருநாடகா மாநிலம் மைசூரில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட தமிழ் கல் வெட்டுகளின் மைப்படிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்., சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில் கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்ன ரசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- தமிழ் நாட்டின் வரலாற்றில் இது முக் கியமான நாளாகும். கருநாடகா மாநிலம் மைசூரில் இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கல்வெட்டுப் பிரிவில் பல ஆண்டுகளாக இருந்த தமிழ் கல்வெட்டுகளின் மைப்படி களை சென்னைக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியுள்ளது. 

இந்த மைப்படிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் இருந்து மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டு இருந் தன. 

இதுதொடர்பாக நீதி மன் றத்தில் வழக்கு தாக்கல் செய் யப்பட்டு இருந்தது. பல்வேறு தொடர் முயற்சியின் காரணமாக மைப்படிகள் தற் போது இங்கு கொண்டு வரப் பட்டுள்ளது.

இந்தியாவில் கிடைக்கும் கல் வெட்டுகளில் தமிழ் கல்வெட்டு கள்தான் மிக அதிகம். இப்போது 24 ஆயிரம் கல்வெட்டு படிகள் மைசூரில் இருக்கின்றன. அவற் றில் 13 ஆயிரம் கல்வெட்டுகளுக் கான மைப்படிகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

1887ஆம் ஆண்டிலிருந்து 1942-ஆம் ஆண்டுவரை இருக்கக் கூடிய இந்த மைப்படிகள் 'பார் கோட்' மூலம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைக் கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மைப்படிக்கும் 'டிரான்ஸ்கிரிப்ட்' என்ற எழுத்துப்படிகளும் அனுப் பப்பட்டுள்ளன. சென்னை உத் தரவுப்படி, இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சென் னையில் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கல்வெட்டுகளும் மிக விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இது முதலமைச்சர் எடுத்துள்ள முயற்சிகளுக்கு கிடைத்திருக்கும் ஒரு நல்ல வெற்றியாகும்.

1876ஆ-ம் ஆண்டில் ஆதிச்ச நல்லூரில் முதன்முறையாக ஆய்வு மேற்கொண்டவர், அங்கு கிடைத்த பொருள்களை ஜெர் மனிக்கு கொண்டு சென்றார். அந்தப் பொருள்கள் இப்போது பெர்லின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதற் குப் பிறகு 1903-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வில் கிடைத்த பொருள்கள் சென்னை அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டி ருக்கின்றன. வெளிநாட்டில் இருக் கும் இதுபோன்ற பொருள்களை மீட்டெடுப்பதில் அரசு தொடர்ச் சியான ஆர்வம் காட்டி வருகிறது.

இங்கே வந்திருக்கும் மைப் படிகளையும், இனி வரவுள்ள மீதிமைப்படிகளையும் உரிய முறையில் வைத்து ஆய்வுக்கு உட்படுத்துவதில் எந்தவிதமான உதவி செய்வதற்கும் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. மைப்படிகளை இந்திய தொல்லி யல் துறை ஒன்றாக இணைத்து மிகச்சரியான அளவில் வரிசைப் படுத்தி உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆலயத்தின் அருகில் உள்ள அந்தத் துறையின் அலுவலகத்தில் மைப்படிகள் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment