ஓய்வு பெற்ற ஆசிரியரும், உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், 'விடுதலை'யை வரிப் பிறழாமல் படிக்கும் நீண்ட கால சந்தாதாரரும், இயக்க ஏடுகளைப் பரப்புவதில் மிக ஆர்வமுடையவருமான அருமைத் தோழர் தருமபுரி மானமிகு எஸ். துரைசாமி (வயது 84) அவர்கள் நேற்று (21.11.2022) மறைவுற்றார் என்பதை அறிவிக்கப் பெரிதும் வருந்துகிறோம்.
அவர் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியுள்ள அவரது வாழ்விணையர் மற்றும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், கழகத்தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு: திராவிடர் கழக மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீ.சிவாஜி ஆகியோர் தலைமையில் கழகத்தினர் இறுதி மரியாதை செலுத்துவர்.
No comments:
Post a Comment