தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

சென்னை, நவ. 12- தமிழ்நாட் டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவ.9ஆம் தேதி தொடங் கியுள்ளது. வரும் டிச.8 ஆம் தேதி வரை ஒரு மாதம் வரை இப்பணி நடைபெறுகிறது. இக் காலகட்டத்தில், வாக்கா ளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத் தம், முகவரி மாற்றம் இவற் றுடன் வாக்காளர் பட்டி யலுடன் ஆதார் இணைப் புக்கான படிவங்களையும் பூர்த்தி செய்து, உரிய ஆவ ணங்களுடன் வழங்கலாம்.

இதற்கிடையில், பணிக்குச்செல்வோர் வசதிக்காக, தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும், நவ.12,13ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர் பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் நேரடியாக படி வங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்கா ளர் சேர்ப்புக்கான அலுவ லர்களிடம் நேரடியாக இப் பணியை மேற்கொள்ளலாம்.


No comments:

Post a Comment