வ.உ.சி. நூல்கள் - சிறப்பு இணைய தளப் பக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

வ.உ.சி. நூல்கள் - சிறப்பு இணைய தளப் பக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, நவ. 19- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயல கத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150ஆம் பிறந்த ஆண்டினை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட வ.உ.சி. 150ஆவது பிறந்த ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். 

'கப்பலோட்டிய தமிழன்' வ.உ. சிதம்பரனார் எழுதிய நூல்கள், அவர் தொடர்புடைய நூல்கள், கையெழுத்துப்பிரதிகள், ஒளிப் படங்கள் மற்றும் இதர ஆவணங் கள் போன்றவை பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு மொத்தம் 127 ஆவணங்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் மின்னுருவாக் கம் செய்யப்பட்டுள்ளன. வ.உ. சிதம்பரனாரால் எழுதப்பட்ட 11 நூல்கள், 7 பதிப்புகள், உரை எழு திய 3 நூல்கள், மொழியாக்கம் செய்யப்பட்ட 4 நூல்கள், வ.உ.சி. பற்றிய 20 வரலாற்று நூல்கள், 6 நூற்றாண்டுப் பதிவுகள், 2 மலர்கள், அவர் குறித்த கட்டுரைகள் அடங் கிய ஒரு தொகுப்பு, 5 ஆய்வு நூல்கள் மற்றும் 6 பிற நூல்கள். 

மேலும், வ.உ.சி. பற்றிய 7 கையெழுத்துப் பிரதிகள், 17 ஒளிப் படங்கள், ஒளி ஒலி ஆவணங்கள், 38 பிற ஆவணங்கள் மற்றும் வாழ்க் கைக்குறிப்பு ஆகியவை மின்னுரு வாக்கம் செய்யப்பட்டு, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின் நூலக இணையதளத்தில் வ.உ.சி. யின் 150 ஆவது பிறந்த ஆண்டினை முன்னிட்டு சிறப்பு இணையப் பக்கமாக (https://www.tamildigitallibrary.in/voc)  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையப்பக்கம் பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்களின் பயன் பாட்டிற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

மேலும், வ.உ.சிதம்பரனார் தொடர்புடைய அனைத்து ஆவ ணங்களையும் மின் மயப்படுத்தும் முயற்சியில் தமிழ் இணையக் கல்விக் கழகம் ஈடுபட்டுள்ளது. நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் வெ.இறை யன்பு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மித்தல், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) சண் முகம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment