Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பிஜேபியின் தேர்தல் திருகு தாளம்!
November 19, 2022 • Viduthalai

பா.ஜனதாவில் இணையுமாறு என்னை அணுகினார்கள்

முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் பகிரங்கக் குற்றச்சாட்டு!

அய்தராபாத், நவ. 19- பா.ஜனதாவில் இணையுமாறு தன்னை அந்த கட்சியின் நண்பர்கள் அணுகியதாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா குற்றச்சாட்டை கூறியுள்ளார். 

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியில் உள் ளது. இந்த கட்சியை சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் சிலருக்கு, கட்சியில் இருந்து விலக சமீபத்தில் பா.ஜனதா தரப்பில் பேரம் பேசிய தாக புகார் எழுந்தது. குறிப்பாக ஆளுங்கட்சியில் இருந்து விலகி அடுத்த தேர்தலில் பா.ஜனதாவில் இணைந்து போட்டியிட்டால் ரூ.100 கோடி தருவதாக கூறி  சில அடையாளம் தெரியாத  நபர்கள் அணுகியதாக சில சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் கூறினர். இந்த விவகாரத்தில் 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாநிலம் மட்டுமின்றி நாடு முழு வதும் பெரும் பரபரப்பை ஏற் படுத்திய இந்த நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்த 7 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றையும் மாநில அரசு அமைத்து உள்ளது. இந்த நிலையில் சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதாவிடமே பா.ஜனதாவில் இணையுமாறு அந்த கட்சியினர் அணுகியதாக நேற்று (18.11.2022) அவர் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

முன்னதாக, இவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயிடம் அலைபேசியல் பேசியதாக பா. ஜனதா நாடாளுமன்ற உறுப் பினர் தர்மபுரி அரவிந்த் கூறியிருந் தார். இதை மறுக்கும் வகையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறு கையில், 'நான் ஒரு கண்ணியமான அரசியல்வாதி. நீண்ட காலம் அரசியலில் இருக்க விரும்புகிறேன். நான் யார் பெயரையும் கூற விரும்பவில்லை. பா.ஜனதாவில் இணையுமாறு அந்த கட்சியின் நண்பர்கள் சிலர் மற்றும் நட்பு அமைப்புகள் என்னை அணுகின. 'ஷிண்டே மாடல்' என்ற பெயரில் இந்த வாய்ப்பை வழங்க முன் வந்தனர். ஆனால் பணிவாக மறுத்து விட்டேன். ஏனெனில் எனது தலைவர் சந்திரசேகர் ராவின் கட்சியில் என் இதயம் உள்ளது' என்று தெரிவித்தார். எனவே தன்னை பற்றி தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்து மாறு பா.ஜனதா நாடாளுமன்ற உறுப்பினருக்கு அறிவுறுத்திய கவிதா, தவறினால் செருப்பால் அடிப்பேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார். 

மராட்டியத்தில் சிவசேனா சார்பில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா-காங் கிரஸ் கூட்டணிக்கு வழங்கியிருந்த ஆதரவை திடீரென விலக்கிக் கொண்டு தனது ஆதரவு சட்ட மன்ற உறுப்பினர்களுடன் பா.ஜன தாவுடன் கைகோர்த்து தற்போது முதலமைச்சராகி இருப்பது குறிப் பிடத்தக்கது. முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் மகளின் இந்த குற்றச் சாட்டு தெலுங்கானா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image
நீட் விலக்கு மசோதா -ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
January 23, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn