மூன்று நாட்களுக்கு கடுமழை சென்னை வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

மூன்று நாட்களுக்கு கடுமழை சென்னை வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு

சென்னை, நவ. 11- வங்கக் கடலில் நிலவும் காற்ற ழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ் வுப் பகுதியாக வலுப் பெறும் நிலையில், காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 3 நாட் களுக்கு தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட் டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக் கண் ணன் வெளியிட்ட செய் திக்குறிப்பு:

காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (11.11.2022)  தென்மேற்கு வங்கக் கட லில் இலங்கை கடலோ ரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ் வுப் பகுதியாக வலுப் பெற்று தமிழ்நாடு, புதுச் சேரி கடற்கரையை நோக்கி நகரக் கூடும்.

இதன் காரணமாக, 11 முதல் 14ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகு திகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்ன லுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

இன்று (11ஆம் தேதி) திருவள்ளூர், ராணிப் பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப் புள்ளது. இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள் ளது.

சென்னை, செங்கல் பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண் ணா மலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலா டுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங் களில் கனமுதல் மிகக் கனமழை பெய்யும்.

தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக் கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருது நகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

12ஆம் தேதி நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள் ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், திருப் பத்தூர், வேலூர், ராணிப் பேட்டை, திருவண்ணா மலை, விழுப்புரம், கள் ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும் பெய்யக் கூடும்.

ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக் கல், கரூர், திருச்சி, புதுக் கோட்டை, மதுரை மற் றும் சிவகங்கை மாவட் டங்களில் ஓரிரு இடங்க ளில் கனமழையும் பெய்யும்.

11, 12ஆம் தேதிகளில் மன்னார் வளைகுடா மற் றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனையொட் டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி களில் மணிக்கு 40 முதல் 55 கிமீ வேகத்தில் சூறா வளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

No comments:

Post a Comment