ஆர்.எஸ்.எஸ். பேரணியின் நோக்கமென்ன? அமைச்சர் பி.கே.சேகர்பாபு குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

ஆர்.எஸ்.எஸ். பேரணியின் நோக்கமென்ன? அமைச்சர் பி.கே.சேகர்பாபு குற்றச்சாட்டு

சென்னை, நவ. 6- ‘‘அமைதி யாக இருக்கும் தமிழ் நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தி தி.மு.க. ஆட் சிக்கு கெட்ட பெயர் ஏற் படுத்த வேண்டும் என் பதே ஆர்.எஸ்.எஸ். பேர ணியின் நோக்கம்’’, என அமைச்சர் பி.கே.சேகர் பாபு குற்றம் சாட்டினார். 

சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப் போது அவர் கூறியதாவது:- 

வருகிற 9ஆம் தேதி கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. அதனை சமாளிக்கவும் தேவையான நடவடிக்கை களை சென்னை மாநக ராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. பருவமழை காலங்களில் சாலையில் பெரிய பள்ளங்கள் எது வும் ஏற்பட்டால் அதனை சரிசெய்ய உடனடி நட வடிக்கை எடுக்க அதிகா ரிகளுக்கு உத் தரவிடப்பட் டுள்ளது. பருவமழைக்கு பிறகு சிறிய பள்ளங்களை சரி செய்து சாலைகள் அமைக்கப்படும். 

புளியந்தோப்பு, சவு கார்பேட்டை பகுதியில் கட்டடம் இருந்து விழுந்த விபத்தில் உயிரி ழப்பு ஏற்பட்டுள்ளது, இடிந்த கட்டடமானது பழமையான கட்டடமா கும். அதனை அப்புறப் படுத்துவது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள் ளது. சென்னை மாநக ராட்சியும் கட்டடத்தை இடித்திட தாக்கீது வழங்கி உள்ளது. ஆனா லும் கீழமை நீதிமன்றத் தில் ஒப்புதல் பெற்று குடி யிருந்து வந்துள்ளனர்.

சென்னை மாநக ராட்சி பகுதியில் பழை மையான கட்டடத்தில் குடியிருப்பவர்களை கண்டறிந்து அவர்களை மாற்று இடத்தில் தங்க வைக்க வடகிழக்கு பருவ மழைக்கு முன்பே முதல்-அமைச்சர் அறிவுறுத்தி னார். அதன்படி மாற்று இடத்திற்கு தங்க வைக் கும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின் றன. இருப்பினும் வீட் டின் உரிமையாளர்கள் கட்டடம் சார்ந்த விஷ யத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 

ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துபவர்களுக்கு மக்களை பற்றி எந்த கவலையும் இல்லை. எப் படியாவது அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு வகையில் பிரச்சினையை ஏற்படுத்தி மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர். எஸ்.எஸ். பேரணியின் நோக்கமாகும். இப்படிப் பட்ட நோக்கம் நிறைவே றுவதற்கு முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலின் நிச் சயம் தடைக்கல்லாக இருப் பார். தமிழ்நாடு அமைதி பூங்காவாக தொடர்ந்து திகழ அவர் எல்லா விதத் திலும் நட வடிக்கைகளை மேற் கொள்வார். இவ் வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment