சென்னையில் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

சென்னையில் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி

சென்னை, நவ. 6- சென்னை யில் முதல் முறையாக பன்னாட்டு புத்தக கண் காட்சி அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18ஆம் தேதி களில் நடக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 

தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையும், தமிழ்நாடு பாடநூல் மற் றும் கல்வியியல் பணிகள் கழகமும், தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் மற் றும் விற்பனையாளர்கள் சங்கமும் (பபாசி) இணைந்து சென்னையில் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18ஆம் தேதிகளில் முதல் முறையாக பன் னாட்டு புத்தக கண் காட்சி நடத்த உள்ளது. இந்த கண்காட்சியின் இலச்சி னையையும் (லோகோ), நிகழ்ச்சி நிரலையும் வெளி யிடும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று (5.11.2022) நடந்தது. 

இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன் பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு, கண்காட்சிக்கான இலச்சினையையும், நிகழ்ச்சி நிரலையும் வெளி யிட்டார். அப்போது பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, ஆணை யர் நந்தகுமார், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கஜலட்சுமி, பொது நூலக இயக்குனர் க.இளம்பகவத் ஆகியோர் உடன் இருந்தனர். 

இதனை த்தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி செய்தி யாளர்களிடம் கூறியதா வது:- பன்னாட்டு ஒலிம்பி யாட் போட்டி எப்படி அறிவுசார்ந்த போட்டி யாக இருந்ததோ, அதனைத் தொடர்ந்து தற்போது சர்வதேச புத்தக கண் காட்சி அறிவுசார்ந்த வாசிப்பை ஊக்கப்படுத் தும் நிகழ்வாக நடக்க இருக்கிறது. சிறந்த தமிழ் இலக்கியங்கள், தமிழ் படைப்புகள் உலகளவில் கொண்டு செல்லும் பணி யில் நம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண் டும் என்ற நோக்கில் முதல்-அமைச்சர் உத்தர வின் பேரில் இந்த கண் காட்சி ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பபாசி நடத்தும் புத்தக கண்காட்சியில் இதற்கென்று சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள வாசிப்பாளர்க ளின் ஆர்வத்தின்படி, அதன் மூலம் எந்த இலக்கியம், படைப்புகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது என்பதெல்லாம் உணர்ந்து, வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு அதற் கான வெளியீட்டு உரி மைகள் வழங்குவதற்கும், அதேபோல் வெளிநாட் டில் இருந்து வரும் படைப்புகளின் வெளி யீட்டு உரிமைகளை பெறு வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகளவில் நம்முடைய தமிழ் எழுத் தாளர்களின் படைப்பு கள் எடுத்துச்செல்லப்பட இருக்கிறது. 

50 நாடுகளில் உள்ள பதிப்பாளர்கள், எழுத்தா ளர்களுக்கு இதில் பங் கேற்க அழைப்பு விடுத் துள்ளோம். குறுகிய கால மாக இருப்பதால், 20 நாடுகளில் இருந்தாவது பதிப்பாளர்கள், எழுத் தாளர்கள் வருவார்கள் என்று நம்புகிறோம். முதல் முறையாக நடத்த இருக்கிறோம். இனி வரும் ஆண்டுகளில் அதிக நாடு களில் இருந்து பதிப்பா ளர்கள், எழுத்தாளர்கள் வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார். ஒவ் வொரு ஆண்டும் பபாசி புத்தக கண்காட்சியை நடத்துவது வழக்கம். அந்த வகையில் அது தொடர் பான அறிவிப்புகள் வரக் கூடிய நாட்களில் வெளியிடப்படும் என பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment