மீன்வளத்துறையில் வேலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

மீன்வளத்துறையில் வேலை

தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

காலியிடம் : மீன்வளத்துறை ஆய்வாளர் பிரிவில் 64, துணை ஆய்வாளர் பிரிவில் 24 என மொத்தம் 88 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : ஆய்வாளர் பணிக்கு மீன்வள அறிவியலில் டிகிரி அல்லது எம்.எஸ்சி., (விலங்கியல் / உயரியல் / கடலோர மீன்வளர்ப்பு / கடலியல்), துணை ஆய்வாளர் பணிக்கு மீன்வள தொழில்நுட்ப பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி., (விலங்கியல் / மீன்வள அறிவியல்) முடித்திருக்க வேண்டும்.

வயது : 1.7.2022 அடிப்படையில் பொது பிரிவினர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை.

தேர்ச்சி முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மய்யம் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கட்டணம் : நிரந்தர பதிவுக்கட்டணம் (ஓ.டி.ஆர்.,) ரூ.150, தேர்வுக்கட்டணம் ரூ.100

கடைசிநாள் : 12.11.2022

விபரங்களுக்கு :tnpsc.gov.in


No comments:

Post a Comment