'இப்பல்லாம் யார் சார் ஜாதி பார்த்துண்டுருக்கா?'
'மனுதர்மத்தில் எங்க சார் தொட்டால் தீட்டுன்னு எழுதியிருக்கு?'
இப்படிப் பேசுகிறவாளின் பேச்சு, "எதுக்கு சார் ஜாதி பேர்ல இட ஒதுக்கீடு? ஜாதியே கூடாதுங்குறா. ஜாதி பேர்ல ரிசர்வேஷன் மட்டும் வேணும்னு கொடி பிடிக்கிறா!" என்று தான் முடியும்.
உங்களவாக்குதான் ஜாதி இல்லையே! அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகட்டும் என்று சட்டம் போட்டால் பஞ்சகச்சத்தை இறுக்கி பூணூலை உருவியபடி உச்சநீதி மன்ற படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருப்பார்கள்.
இப்போது சனாதனத்தை தூக்கிப்பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய தலைவர் மோகன் பாகவத்தே 'யாராவது ஜாதி, வர்ணம் குறித்து பேசினால், அவை கடந்து போனவை. மறக்கப்பட்ட வேண்டும் என்று சொல்லுங்கள்' என பேசியிருக்கிறார்.
'உலகில் எல்லா இடங்களிலும் முன்னோர்கள் தவறு செய்திருக்கிறார்கள். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. தவறுகளை ஏற்றுக்கொள்வதால் நம் முன்னோர்களின் மதிப்பு குறைந்து விடாது!' என்றும் ஒரு படி மேலே போய் பேசியிருக்கிறார்.
அப்படி அவர் பேசுவது உண்மையானால் அதை செயலில் காட்டட்டும். பெரும்பான்மை மக்களான ஒடுக்கப் பட்ட மக்களை இழிவுபடுத்தும் மனு சாஸ்திரங்களை - இதிகாச புராணங்களை தீயிலிட்டு பொசுக்கட்டும்.
சனாதனத்தை வரவேற்கும் ஆளுநர்களை அடக்கி வைக்கட்டும்!
மனுதர்மத்தை இன்றளவும் தூக்கிப்பிடிக்கும் மடையர் களின் மண்டையில் ஓங்கி அடிக்கட்டும்!
இப்படி உங்கள் செயல்பாடுகள் அமையுமானால், அடடா! ஆர். எஸ்.எஸ். இயக்கமே அய்யா பெரியாரின் கொள்கைகளை தூக்கிப்பிடிக்கத் தொடங்கி விட்டது பார்! என்று மகிழ்ச்சி கொள்வோம். வரவேற்போம்.
அதை விடுத்து, 'ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதைதான் ஆர்.எஸ் எஸ். தலைவரின் உரை!' என்பது உலக மக்களுக்கு புரியாமல் போகாது.
ஆடுகளாகவே இருப்போம் என்று நினைத்து விடாதீர்கள். இனி உங்கள் நரித்தனம் இங்கு எடுபடாது.
No comments:
Post a Comment