மனிதன் கல்லுக்கு பதில்
சொல்லில் அடித்தான்
நாகரிகம் என்றனர்
சொல்லுக்கு பதில்
வில்லில் அடித்தான்
நாட்டுப்பற்று என்றனர்
வில்லை ஒழிக்காமலே
விண்வெளி சென்றான்
விஞ்ஞானம் என்றனர்
விஞ்ஞான விளிம்பிலும்
ஜாதியிலே மதங்களிலே
இன்னும் சிலர்...
இதற்கு கல்லடி பட்டே
கல்லறை சென்றிருக்கலாம்
-சிரஞ்சீவி இராஜமோகன்
No comments:
Post a Comment