பா.ஜ.க. ஆளும் கருநாடகாவில் தலை விரித்தாடும் மதவெறி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

பா.ஜ.க. ஆளும் கருநாடகாவில் தலை விரித்தாடும் மதவெறி

மதரசா பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்து துர்கா பூஜை கொண்டாடிய கும்பல்பெங்களூரு,அக்.8- கருநாட காவில் தசரா என்கிற பெயரால் ஊர்வலமாக சென்றவர்கள் முசுலீம்களின் மதரசாவுக்குள் நுழைந்து மதவெறியாட்டம் போட்டுள்ளனர். 

மேலும், முசுலீம் களின் மதரசாவுக்குள்ளேயே பூசையும் நடத்தினார்களாம்.

1460இல் கட்டப்பட்ட மஹமூத் கவான் மதரசா இந்திய தொல்லியல் ஆய்வு அறிக்கையின்படி பாரம்பரிய மய்யமாகவும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ள மதரசாவுக்குள் ளேயே இந்துத்துவா மத வெறி யர்கள் பூட்டை உடைத்து உள்ளே அத்துமீறி சென்றுள்ளனர்.

கருநாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில்  5.10.2022 அன்று இரவு தசரா ஊர்வலம் நடந் துள்ளது. அப்போது வழியில் இருந்த முசுலீம்களின் மதரசா வுக்குள் ஊர்வலமாக சென்றவர் களில் சிலர் நுழைந்தனர். மதரசா கட்டடத் தின் ஒரு பகுதியில் அவர்கள் பூசையும் நடத்தி யுள்ளனர். அங்கே 'ஜெய் சிறீராம்', 'இந்து தர்மம் வாழ்க' போன்ற முழக்கங்களையும் எழுப்பியுள் ளனர். 

இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 9 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று முஸ்லிம் அமைப்புகள் எச்சரித்திருந்த நிலையில் 4 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர்.

இந்துத்துவா மதவெறியர் களின் அத்துமீறல்குறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில், மதரசாவின் பூட்டை உடைத்து கும்பல் உள்ளே சென்றுள்ளது. மதரசாவின் படிகளில் நின்று 'ஜெய் சிறீராம்', 'இந்து தர்மம் வாழ்க' முழக்கங்களை அவர்கள் எழுப்பியுள்ளனர். பின்னர் கட்ட டத்தின் ஒரு ஓரத்தில் பூசைகள் செய்துள்ளனர் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment