கனவில் வந்து வேல் வைக்கச் சொன்னதால் உத்தரவுப் பெட்டியில் வேலாம்
கரூர் அக். 8 பக்தர் ஒருவரின் கனவில் முருகன் வந்து எனது கோவில் உத்தரவுப் பெட்டியில் வேல் வைத்து பூசை செய் என்று கூறினாராம். இதனை அடுத்து சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் வேல் வைத்து பூசை செய்து வருகிறார்களாம்.
இதற்கு முன்பாக இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, சோளி ஆகிய பொருட்களை உத்தரவுப் பெட் டியில் வைத்து பூசை செய்யப்பட் டதாம். இவ்வாறு வைத்து பூசை செய்யும் பொருட்கள் சமூகத்தில் நடக்கும் நன்மை தீமைகளை முன்கூட்டியே உணர்த்துவதாக அமையும். சித்தர்களி«னீயே மிகவும் சக்தி வாய்ந்தவராகவும், தமிழ்க் கடவுள் முருகனின் சிலையை செய்த வருமான போக ரின் படம் உத்தரவாகி உள்ளதால், உலகம் மீண்டும் சித்தர்களை நோக்கி திரும்பும் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டதாம்
இந்த உத்தரவு பெட்டியில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்து பூசை செய்ய வேண்டும் என்று சிலருக்கு கனவில் தோன் றும். தனக்கு வந்த கனவு பற்றி கோவிலுக்கு வந்து நிர்வாகி களிடம் பக்தர் கூறினால், சுவாமியிடம் பூ கேட்டு, அதில் வெள் ளைப் பூ வந்தால் பக்தர் சொன் னது உண்மை என்பது நிச்சய மாகும். இதனையடுத்தே பக்தர் சொன்னதை உத்தரவுப் பெட் டியில் வைத்து பூசை செய்வார் களாம். இதில் வைத்து பூசை செய்யப்படும் பொருள்கள் சமு தாயத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளனவாம். எதிர் காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்த்தும் அறி குறியாக அமையுமாம்.
No comments:
Post a Comment