நெல்லை, அக். 11- தமிழ்நாட் டிலும் வட இந்தியாவைப் போல் இறைச்சி விற்ப னையாளர்களைத் தாக்கும் நிகழ்வு தொடர்ந்து நடை பெற ஆரம்பித்துள்ளது.
6.10.2022 அன்று கோவையில் ஹிந்துக்க ளின் ‘புனித நாளில்‘ இறைச்சிக்கடையை ஏன் திறந்துவைத்துள்ளாய் என்று கூறி தாக்கிய நிகழ் வைத் தொடர்ந்து தற்போது நெல்லையிலும் ஹிந்து அமைப்பினர் இறைச்சி கடைக்கார ரைத் தாக்கிய நிகழ்வு நடந்துள்ளது.
திருநெல்வேலி இலந் தைகுளத்தை சேர்ந்தவர் முத்துராஜ். இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சிலர் நீண்ட நாள்களுக்கு முன்பு இறைச்சியைக் கடனுக்கு வாங்கியுள்ளனர்.
இந்த நிலையில் பணத்தை திருப்பிக் கேட்ட போது "நீ எப்படி தசரா நாள்களில் கடையை திறக்கலாம் என்று கூறி கடையை சேதப்படுத்தி கடைக்காரர்களையும் கட்டையால் தாக்கி கொலை செய்துவிடுவோம்" என்று மிரட்டியதாக அப் பகுதி மக்கள் கூறுகின்ற னர்.
தாக்குதல் நடத்தியவர் கள் அப்பகுதி ஹிந்துத் துவ அமைப்பின் உறுப்பி னர்கள் ஆவர். இது ஹிந்து அமைப்பின் பிரமுகர்க ளின் கொடுக்கல் வாங்கல் தகராறு என்றும், இந்தப் பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என்றும் உள்ளூர் காவல்துறையிடம் கூறி பிரச்சினையை மூடி மறைக்கப் பார்க்கின் றனர்.
இது போன்ற நிகழ்வு களை அரசு வேடிக்கைப் பார்த்தாலோ அல்லது ஹிந்துத்துவ அமைப்பின ரின் கோரிக்கைக்கு செவி மடுத்தாலோ வட இந்தி யாவைப் போன்று மாநி லம் முழுவதும் இவர்கள் வெள்ளி, செவ்வாய் என்று சொல்லிகொண்டு இறைச்சிக்கடைகளை மூடுமாறு மிரட்டல் விடுக் கத் துவங்கிவிடுவார்கள்
No comments:
Post a Comment