செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

செய்திச் சுருக்கம்

உத்தரவு

மழைநீர் வடிகால்களை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

உரிமம்

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் தொலைத்தொடர்பு சேவை வழங்க அதானி நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு உரிமம் வழங்கியுள்ளதாம்.

தவிப்பு

ஆந்திரா - அனந்தபூர் மாவட்டத்தில் நள்ளிரவு பெய்த மழையால் 50 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் விடிய, விடிய மாடிகளில் தவித்தனர்.

அறிவுரை

அதிக ஊதியத்தில் வேலை என்ற விளம்பரத்தை நம்பி 6 மாத சுற்றுலா விசாவில், இளைஞர்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுரை.

அதிகரிப்பு

சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்த பெய்து வரும் மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு.

மீட்பு

சென்னை மண்ணடி, பூக்கடை பகுதியில் பணியாற்றி வந்த 5 குழந்தை தொழிலாளர்களை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து மீட்டனர்.

சான்றிதழ்

அமெரிக்க தூதரகம் மூலம் ஆங்கில பயிற்சி பெற்ற சென்னை மாநகராட்சி பள்ளிகளின் 24 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை மேயர் பிரியா வழங்கினார்.

உறுதி

தமிழ்நாட்டில் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிப்பது பற்றி விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என ஒன்றிய உணவுத் துறை செயலாளர் தகவல்.

ஆராய குழு

இந்திய இருமல் மருந்து குறித்த உலக சுகாதார அமைப்பு அளித்த அறிக்கையை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை ஒன்றிய அரசு நியமித்துள்ளது.


No comments:

Post a Comment