சென்னை, அக். 13- தமிழ்நாட்டைச் சேர்ந்த திறமையான 40 மாற்றுத் திறனாளி பெண் குழந்தைகள் கல்வி பயில ரூ.10லட்சம் மதிப்பி லான உதவித்தொகையை வழங்கப் பட்டது.
பன்னாட்டு பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் செவ்வாயன்று 11.10.2022 அன்று நடைபெற்ற விழாவில் இந்த உத வித் தொகைகளை நியூஸ் 7 தமிழ் தொலைக் காட்சியின் மேனாள் நிகழச்சி தயாரிப்பு நிர்வாகி மறைந்த சண்முகம் தாயார் உல கம்மாள் வழங்கினர். உதவித் தொகை பெற்றவர்களில் கணிசமா னவர்கள் சிறு பான்மை குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இக் குழந்தைகள் ஓராண்டு மட் டுமல்லாமல் தொடர்ந்து 5 ஆண்டு கள் வரை கல்வி உதவித்தொகை பெறுவார்கள் என்று நிகழ்ச்சியில் பேசிய தொழில் முனைவோர் அர்ஜூன் ரங்கா கூறினார்.
தமது தந்தையார் ரங்காராவ் நினைவாக மைசூரில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் குழந் தைகள் தங்கிய பயில உண்டு உறை விடப்பள்ளியை 20 ஆணடுகளுக்கு மேலாக நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment