தேர்தல் வெற்றிக்கு எதை வேண்டுமானாலும் பா.ஜ.க. செய்யும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

தேர்தல் வெற்றிக்கு எதை வேண்டுமானாலும் பா.ஜ.க. செய்யும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை, அக்.10 உங்களின் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. நாம் பயன்படுத்தும் சொல் மிக மிக முக்கியமானது. மிக மிக எச்சரிக்கையாக பேசுங்கள். நீங்கள் சொன்னத்தை வெட்டி,   ஓட்டி பரப்புவார்கள். இது தான் எதிரிகளின் நோக்கம்.

இது முக்கியமான கால கட்டம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டு உள்ளது. யாரும் மெத்தனமாக இருக்கக்கூடாது. 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண் டும். சட்டமன்ற தேர்தலுக்கு இது தான் அடித்தளம்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எதையும் செய் யும் பாஜக. எந்த கீழ்தரமான அரசியலுக்கும் போவார்கள். மதத்தை, ஆன்மிக உணர்வை தூண்டி அரசியல் செய்ய பார்க்கிறது பாஜக. அரசியலையும், ஆன்மிகத்தையும் எப்போதும் இணைக்காதவர்கள் தமிழ்நாடு மக்கள் என்பதால் தான் தமிழ்நாட்டில் மூச்சுத் திணறுகிறது பாஜக.

திமுகவை எதிர்ப்பதை விட அதிமுகவிற்கு எந்த காலத்திலும் வேறு கொள்கை இல்லை. அதனால்தான் இன்று உணர்ச்சி இழந்து கிடக்கிறது. சாதனைகளை எடுத்துச் சொல்ல முடியாத பாஜகவும், சரிந்தும் சிதைந்தும் கிடக்கும் அதிமுகவும் தேர்தல் களத்தில் பொய் பரப்புகளை கட்டவிழ்த்து விடுவார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைக்கும் பணியை இப்போதே துவங்க வேண்டும். அடுத்த இரண்டு மாதத்திற்குள் இந்தப் பணியை முடிக்க வேண்டும்." இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


No comments:

Post a Comment