டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன் கார்கே தேர்ந் தெடுக்கப்பட்டார். வருகிற 26-ஆம் தேதி பதவி ஏற்கிறார்.
மத்தியப் பிரதேசத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், நோயாளிகளுக்கு மருந்து பரிந்துரை செய்யும் தாளில் சிறீஹரி என மேலே எழுத வேண்டும் என்ற முதலமைச்சர் சவுகானின் கட்டளைக்கு எதிர்ப்பு. இது தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டு தலுக்கு எதிரானது என கருத்து.
தி இந்து:
றீ வெறுக்கத்தக்க பேச்சுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிப்பதன் மூலம் பன்முகத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு ஆதரவாக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அய்.அய்.டி. மும்பையில் நடைபெற்ற விழாவில் அய்.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ட ரெஸ் பேச்சு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment