தாம்பரம் கழக மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

தாம்பரம் கழக மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

கூடுவாஞ்சேரி, அக். 15-  தந்தை பெரியார் அவர்களின் 144 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 17.9.2022 அன்று தாம்பரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் நகர திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் உருவப்படம் வைத்து பெரியார் படத்திற்கு நகர பொறுப்பாளர் மு.தினேஷ் குமார் தலைமையில் மாலை அணிவித்து சமூக நீதி நாள் உறுதி மொழி எடுத்து மரியாதை செலுத்தப்பட்டது,

இந்த நிகழ்வில் இரா.மகாலிங்கம், மு.ராஜேஷ், மா.ராசு, ஆட்டோ கோபி, சுசெங்குட்டுவன்,மாடம்பாக்கம் செ.விஜயா ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.  திராவிட இயக்க தமிழர் பேரவை பொறுப்பாளர் தா.முத்துக்குமார் தலைமையில், இளங்கோ,மணி, பாபு ஆகிய தோழர்களும் விடுதலை சிறுத் தைகள் கட்சி பொறுப்பாளர் ரமணன் தலைமையில் பெருந்திரளான சிறுத்தை களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் ரயில்வே ஸ்டேஷன் சாலை யில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு தி.மு.கழகம் சார்பில் நகர மன்ற தலைவர்  எம்.கே.டி. கார்த்திக் தலைமையில் தி.மு. கழக தொண்டர்கள் 100க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு மாலை அணி வித்து (லட்டு)இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

மேனாள் அ.தி.மு.கழக பேரூராட்சி தலைவர் டி.சீனிவாசன் தலைமையில் பெருந்திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

ம.தி.மு.கழக தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் மரி யாதை செலுத்தினர். நகர சிபிஅய் கட்சி தலைவர் சம்பத் தலைமையில் தொண்டர் கள் கலந்து கொண்டு மரியாதை செலுத் தினர். சிபிஎம் தலைவர்களும் தொண்டர் களும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் அனைத்து சமூக இயக்கங்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு தொடர் முழக்கமிட்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment