வடசேரி, அக். 15- 12.10.2022 புதன் அன்று மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு ஒன்றியம் வடசேரியில் வீம.சா. மெய்க்கப்பன் சகோதரியும், வீம.மெ.கரிகாலன், வீம.மெ.இளங்கோ, வீம.மெ.நெடுஞ்செழியன் ஆகியோரது அத்தையும், வீம. இள.ரஜினிகாந்தின் தாயா ருமான க.நவநீதம்மாள் அவர்க ளின் நினைவேந்தல் மற்றும் படத் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் தலைமையேற்று உரையாற்றினார்.
கழக பொதுச் செயலாளர்
தஞ்சை இரா.ஜெயக்குமார் கலந்து கொண்டு மறைந்த நவநீதம்மாள் அவர்களின் படத்தினை திறந்துவைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.
மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருண கிரி, மாவட்ட துணைத் தலைவர் முத்து. இராசேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் தீ.வ.ஞான சிகாமணி, மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி ஆகி யோர் முன்னிலையேற்று நினை வேந்தல் உரையாற்றினர். ஒன்றிய செயலாளர் மாநல். பரமசிவம், மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் க.கண்ணதாசன் ஆகியோர் நினை வேந்தல் உரையாற்றினார். கழக பேச்சாளர் இராம.அன்பழகன் கலந்துகொண்டு, மூடநம்பிக்கை நிகழ்வுகளை முறியடிக்கும் வகை யில், கொள்கை விளக்க உரையாற் றினார்.
இந்நிகழ்வில் தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனை வர் வே.இராஜவேல், ஒன்றிய மகளி ரணி தலைவர் இ. அல்லிராணி, மாணவர் கழகத் தோழர் நிலவன், கிளை கழக மகளிரணி தோழர் ஜனார்த்தனி , மற்றும் உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள், கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment