புதுடில்லி, அக்.12 நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்மீதான வழக்குகளை விசாரிக்க போதிய நீதிமன்றங்களை ஏற்படுத்தி அந்த குற்ற வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்கவும், தண்டனைக் குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட ஆயுள்கால தடை விதிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்திற்க்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்குரை ஞர் விஜய் ஹன்சார்யா, இந்த விவ காரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மொத்தமுள்ள நாடாளு மன்ற உறுப்பினர்களில் சுமார் 400 பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த விவ காரத்தை உச்சநீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் கண் காணித்து வருகிறது. நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விவரங் களை உச்சநீதிமன்றம் கேட்டுப் பெறலாம். நீதித்துறை அதிகாரி களின் பணியிடமாற்றத்தை அந் தந்த உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதிகள் கண்காணிக்கலாம். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதியுடன்தான் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கிவிடலாம் என வாதிட்டார். அதை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்மீது 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விவரங் களை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டது.
நீதித்துறை அதி காரிகளின் பணியிடமாற்றத்துக்கு அந்தந்த உயர் நீதிமன்றம், உச்சநீதி மன்றத்தில் அனுமதி பெறத் தேவையில்லை எனவும் மாற்றியமைத்தது.
No comments:
Post a Comment