பாராட்டத்தக்க சாதனை தமிழ்நாட்டில் நிதிப் பற்றாக்குறை 3.38 விழுக்காடு ஆகக் குறைப்பு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 20, 2022

பாராட்டத்தக்க சாதனை தமிழ்நாட்டில் நிதிப் பற்றாக்குறை 3.38 விழுக்காடு ஆகக் குறைப்பு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

சென்னை,அக்.20- உலக பொருளாதார சரிவு வந்தாலும், ஒன்றிய அரசைவிட தமிழ்நாட்டுக்கு  பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

தமிழ்நாடு அரசின் கூடுதல் செலவி னங்களுக்காக ரூ.3,796 கோடிக்கான முதல் துணை மதிப்பீடுகள் சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் (அக்.18) தாக்கல் செய் யப்பட்டன. அதன் மீதான பதில் உரையில் நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் நேற்று (19.10.2022) பேசியதாவது: 

நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த போது அறிவித்த வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறையைவிட இறுதிக்கணக்கில் கூடுதலாக குறைந்திருப்பதால், கடந்த ஆண்டு இருந்த 4.61 விழுக்காடு நிதி பற்றாக்குறை, 3.38 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு அறிவித்த கடன் எல்லைக்குள் குறை வாக வந்ததால் மாநிலத்தின் சுய மரி யாதையையும், கடன் வாங்கும் சக்தி யையும் அதிகரித்துள்ளோம். உலக பொருளாதார நெருக்கடி வரும் என்ற அச்ச சூழ்நிலை உள்ளது. அதுபோல வந்தால், தேவையான கடன் வாங்கும் திறனை உருவாக்கி உள்ளோம். கடன் பற்றாக்குறையை குறைத்ததால், ஆண்டுக்கு ரூ.1,240 கோடி வட்டியை குறைத்துள்ளோம். 7 ஆண்டுகளாக சரிந்த பற்றாக்குறையை நிறுத்துவது சாதாரண காரியம் அல்ல. உலகிலேயே சிறப்பான ஆலோசனை பெறுவதால், முதலமைச்சரின் பாதுகாப்பால் வரும் விளைவு இது. உலக பொருளாதார சரிவுவந்தால், ஏற்கெனவே எடுக்கப் பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, மற்ற மாநிலங்கள், ஒன்றிய அரசைவிட தமிழ்நாட்டுக்கு  பாதிப்பு குறைவாகவே இருக்கும். 

-இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment