பழையகோட்டை ந. அர்ச்சுனன் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற மருமகள் மனோ மன்றாடியார், பேரன் நவீன் மன்றாடியார், தி.மு.க. சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, மதிமுக பொருளாளர் அ.கணேசமூர்த்தி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.
ஈரோடு மாநகர மேயர் நாகரத்தினம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ. திருமகன் ஈ.வெ.ரா., பொத்தனூர் க. சண்முகம், பெரியாரியல் சிந்தனையாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.
ஈரோடு மாநகர துணை மேயர் வீ.செல்வராஜைப் பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். இரண்டாவது முறையாக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தியூர் ப. செல்வராஜ் அவர்களைப் பாராட்டி தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார். சுயமரியாதைச் சுடரொளி வீரன் குடும்பத்தினர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3,000/-த்தை நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
ஈரோட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ஈரோடு மாநகர மேயர் நாகரத்தினம், தி.மு.க. சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ. திருமகன் ஈ.வெ.ரா. மதிமுக பொருளாளர் அ.கணேசமூர்த்திஆகியோர் பயனாடை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் வரவேற்றனர்.
தந்தை பெரியார் தொடர்பான பத்திரிகை செய்திகளை தொகுத்து அதனை பெரியார் பெருந்தொண்டர் கோபி. இரா. சீனிவாசன் தமிழர் தலைவரிடம் வழங்கினார். மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபி வி.பி. சண்முகசுந்தரம், ஈரோடு சம்பத் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர். மூத்த மருத்துவர் எம். தமிழ்க்கொடி தமிழர் தலைவரை சந்தித்து தந்தை பெரியார், காமராசர், தமிழர் தலைவர் ஆகியோரின் சந்திப்புகளை நெகிழ்ச்சியுடன் எடுத்துக்கூறி பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்குவதாக தெரிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் விடுதலை மலரை வழங்கினார்.
No comments:
Post a Comment