தருமபுரி மாவட்ட இளைஞரணி- மாணவர் கழகம் சார்பில் ‘‘தீபாவளி திடுக்கிடும் உண்மைகள்'' 10 ஆயிரம் துண்டறிக்கை: - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 24, 2022

தருமபுரி மாவட்ட இளைஞரணி- மாணவர் கழகம் சார்பில் ‘‘தீபாவளி திடுக்கிடும் உண்மைகள்'' 10 ஆயிரம் துண்டறிக்கை:

2 நாளில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரிகள் - பொதுமக்களுக்கு வழங்கி சாதனை!! 

தருமபுரி, அக்.24- தருமபுரி மாவட்டத் திராவிடர் கழகத்தின் ஆலோசனையின் பேரில் மாவட்ட கழக இளைஞரணி மாணவர் கழகத்தினர் மற்றும் கழக பொறுப்பாளர்கள் இரண்டு நாளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும்  பேருந்து பயனிகளுக்கும், 10 ஆயிரம் துண்டறிக்கையினை வழங்கினர்.

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீ.சிவாஜி அவர்கள் ஆலோசனையின் பேரில் தீபாவளி திடுக்கிடும் உண்மைகள் என்னும் தலைப்பிலான மூடநம்பிக்கை ஒழிப்பு துண்டறிக்கை கழக மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு. யாழ்திலீபன், மண்டல மாணவரணி செயலாளர் இ.சமரசம் ஒருங்கிணைப்பில் 10க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு  மாவட்ட கழக பொறுப்பாளர்கள் உடன் இணைந்து மாணவ மாணவிகளுக்கும் பேருந்து நிலையங்களிலும் கிராமங்களிலும் வழங்கப்பட்டன .               

கலைக்கல்லூரி. 

தருமபுரி அரசினர் கலைக்கல்லூரியில் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் தலைமையில் தீபாவளி திடுக்கிடும் உண்மைகள் என்னும் துண்டறிக்கை களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர். தமிழ்ச்செல்வி, மாநில மாணவர் கழக துணை செயலாளர்  செல்லதுரை,  மண்டல  மாணவர் கழக செயலாளர் இ.சமரசம், மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு.யாழ்திலீபன் ஆகியோர் கலந்துகொண்டு துண்டறிக்கைகளை வழங்கினர்.  

இந்த நேரத்தில் அங்கே வந்த காவல் துறையினர் கல்லூரி மாணவர்களுக்கு துண்டறிக்கைகளை வழங்கக்கூடாது; தொடர்ந்து வழங்கினால், வழக்குப் போடுவோம் என மிரட்டல் விடுத்தனர்.  துண்டறிக்கை வழங்குகிறோம் எங்கள் மீது  வழக்குப் போடுவதாக இருந்தால் போட்டுக் கொள்ளுங் கள் என காவல்துறையினரிடம் மாநில அமைப்புச் செயலாளர் ஜெயராமன் கூறிவிட்டு, தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு துண்டறிக்கைகளை வழங்கி வந்தனர் .                    

பாப்பாரப்பட்டி                                          

பாப்பாரப்பட்டியில் பொதுக்குழு உறுப்பினர் புலவர் இரா.வேட்ராயன் தலைமையில் துண்டறிக்கை வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட தலைவர்வீ. சிவாஜி தொடங்கி வைத்தார்.          மண்டல கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் க.சின்னராஜ், பாப் பாரப்பட்டி நகர அமைப்பாளர் சுந்தரம், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் கண்.இராமச்சந்திரன், நரசிம்மன் ஆகியோர் கடைவீதி, அரசு அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ‘‘தீபாவளி ஒரு திடுக்கிடும் உண்மை'' என்னும் துண்டறிக்கைகளை வழங்கினர்.                                    

பகுத்தறிவாளர் கழகம்                                         

பாப்பிரெட்டிப்பட்டியில் பகுத்தறிவாளர் கழக மாநில கலைத் துறை செயலாளர் மாரி. கருணாநிதி தலைமையில் அரசு கலைக் கல்லூரி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பேருந்து நிலையம், கடை வீதி ஆகிய இடங்களில் ஒன்றிய இளைஞரணி தலைவர் வினோத், தமிழரசன், கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தீபாவளி திடுக்கிடும் தகவல் என்னும் துண்டறிக்கைகளை வழங்கினர்.                                         

துறிஞ்சிபட்டி.

துறிஞ்சிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கடை வீதி மற்றும் வாசி கவுண்டனூர் கிராமத்தில் கழக  மாணவர் கழகத் தோழர்கள் சக்திவேல், சண்முகம், தமிழரசன் ஆகியோர் இணைந்து மாணவ, மாணவிகளுக்கும் பொதுமக் களுக்கும் துண்டறிக்கைகளை வழங்கினர்.                                                                                

கடத்தூர்.                                                 

கடத்தூர் பேரூராட்சி பகுதியில் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரி, பேருந்து நிலையம், கடைவீதிகளில் மாவட்ட மாணவர் கழக செயலாளர் ப.பெரியார் தலைமையில் கு.அரிகரன் மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு.யாழ்திலீபன், மண்டல மாணவர் கழக செயலாளர் இ.சமரசம் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரதாப், சக்திவேல் ஆகியோர் துண்டறிக்கைகளை வழங்கினர் வழங்கினர்.                                                                           

கம்பைநல்லூர். 

கம்பைநல்லூர்  பேருந்து நிலையம், கடைவீதி, பத்தல அள்ளி கிராமத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வினோத்குமார் தலைமையில் மாணவர் கழகத் தோழர்கள் குணசீலன், சந்திரகாசன், சூரியகாசன் ஆகியோர் துண்டறிக் கைகளை வழங்கினர்.

சோளக் கொட்டாய்.     

சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட இளைஞரணி தலைவர் த.யாழ்திலீபன், மண்டல மாணவரணி செயலாளர் இ.சமரசம் மாணவர் கழகத் தோழர் சக்திவேல் ,வினோத்குமார் ஆகியோர் மாணவ, மாணவி களுக்கும் ஆசிரியர்களுக்கும் துண்டறிக்கைகளை வழங்கி னர். பொறியியல் கல்லூரி. தர்மபுரியில் இருந்து அரூர் செல்லும் சாலையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மண்டல மாணவர் கழகச் செயலாளர் இ.சமரசம் தலைமையில் மாவட்ட இளைஞரணி தலைவர் யாழ்திலீபன், வினோத்குமார் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு துண்டறிக்கைகளை வழங்கினர்.                                                                             

தருமபுரி  பேருந்து நிலையம். 

தருமபுரி புறநகர் பேருந்து நிலையம், நகரப் பேருந்து நிலையங்களில் தீபாவளி திடுக்கிடும் உண்மைகள் என்னும் துண்டறிக்கைகளை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கழகத் தலைவர் வீ. சிவாஜி தலைமையில் மாவட்ட செயலாளர் பீம.தமிழ் பிரபாகரன் முன்னிலையில், மண்டல திராவிடர் கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன் பயணிகளுக்கு துண்டறிக்கைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல ஆசிரியர் அணி அமைப்பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் கு.சர வணன், ஒன்றிய பொறுப்பாளர் காமலாபுரம் இரா.ராமசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு.யாழ்திலீபன், மண்டல மாணவர் கழக செயலாளர் இ.சமரசம் ஆகியோர் பேருந்து களிலும், பேருந்து நிலையத்திலுள்ள பயணிகளுக்கும் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் துண்டறிக்கைகளை வழங்கினர்.   

No comments:

Post a Comment