புதுடில்லி, செப்.4- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6, 809 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து, 809 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது. 2.9.2022 அன்று 7 ஆயி ரத்து 219 ஆக இருந்த கரோனா பாதிப்பு நேற்று 6 ஆயிரத்து 809 ஆக குறைந்து உள்ளது.
இதுவரை இந்தியா வில் கரோனாவால் பாதிக் கப்பட்டோர் எண்ணிக்கை 4,44,49,726 லிருந்து 4,44,56,535 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 8,414 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள் ளனர். இதன் மூலம் இது வரை கரோனா தொற்றி லிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,38,65,016 லிருந்து 4,38,73,430 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இந்தியாவில் கரோனாவுக்கு ஒரே நாளில் 26 பேர் பலியாகினர். இதுவரை 5,27,991 பேர் உயிரிழந்தனர்.
No comments:
Post a Comment