பெரியார் உலகமயமாகிறார் : மண்டைச் சுரப்பை உலகு தொழும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

பெரியார் உலகமயமாகிறார் : மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மலேசியா  நாட்டில் உள்ள பினாங்கு  மாநிலத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

  பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமியுடன் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சந்திப்பு

தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா  மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலம் நிப்போன்திபால் நகரில் தாமன் செரிபிஸ்தாரி மண்டபத்தில் மாஸ்டர் கவிக்குமார் தலைமையில்23.9.2022வெள்ளி  இரவு 7 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. 

கிளைக் கழக தலைவர் பொன் ராமன் வரவேற்புரை ஆற்றினார். மாநில செயலாளர் யோகேஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார் நிகழ்வில் தேசியத் தலைவர் அண்ணாமலை தேசிய துணை பொதுச் செயலாளர் நாகேந் திரன் முன்னிலை வகித் தனர். திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தந்தை பெரியார் அவர்கள் பெண் விடுதலைக்கு இளைஞர்களின் எழுச்சிக்கு சமூக நீதிக்கு ஜாதி ஒழிப்புக்கு ஆற்றிய பங்கு பணிகளை விரிவாக எடுத்துக் கூறி ஒரு மணி நேரம் சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் தேசிய நிதி செயலாளர் காளிதாசன் கிளை துணைத் தலைவர் ரமேஷ், பொருளாளர் பரமேஸ்வரி ரமேஷ், நேசமலர், தியாகராஜன், ரவீந்திரன், கேசவன், மாடுனி, சிவன், துர்கா, சக்தி அழகேசன், காந்திமதி, வைஷ்ணவி, வனஜா, அம்ரிஷ்,  மேஸ்வரன், கலீனா மலர், தர்ஷினி, சித்ராதேவி, நிஷாலன், தனுஜா, கண்மணி, இரா.அன்பழகன் முதலானோர் பங்கேற்று சிறப்பித்தனர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திர சேகரனுக்கு நினைவு பரிசை கிளை தலைவர் பொன் ராமன் வழங்கினார். டத்தின் அங்காயி கங்காதரன் மாத்தியோஸ் பங்கேற்றனர். ரமேஷ் நன்றி கூறினார்

மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர்ப. ராமசாமி அவர்களை 22 9 2022 அன்று 2.30 மணிக்கு அமைச்சு அலுவலகத்தில் சந்தித்தார் மலே சியா, தமிழ்நாடு இரு வழி கழக ஒத்துழைப்பு தமிழர்களுக்கான அங்கீகாரம் தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சுயமரியாதை கருத்துக்கள் பரவல் தொடர்பாக முனைவர் துரை சந்திரசேகரன் இந்த சந்திப்பை நடத்தினார். 

மலேசிய திராவிடர் கழகம் குறிப்பாக பினாங்கு மாநில கழகத்துடன் ஆன பேராசிரியர் ராமசாமி அவர்களின் ஒத்துழைப்பு தோழமை தொடர்பாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் .இந்த சந்திப்பில் மலேசிய திராவிடர் கழக தேசிய தலைவர் பெத்த அண்ணாமலை, பினாங்கு மாநில கழக துணைத் தலைவர் மருதமுத்து, மாக் மண்டின் கிளைத் தலைவர் நாராயணசாமி ஆகியோர் உடன் இருந்தனர். 45 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது. தந்தை பெரியாரின் மீது அளவற்ற பற்றுதல் கொண்டவராக, பெரியார் கொள்கையை மக்கள் எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்ற ஆசை உள்ளவராக துணை முதலமைச்சர்  விளங்கினார்.

பினாங்கு  நகரில் மணிவிலாஸ் உணவகத்தில் தோழர்கள் ஒன்று கூடல்: 22 .9 .2022 அன்று மதியம் 1 மணியளவில்  தோழர்களின் ஒன்று கூடல் நடைபெற்றது. பினாங்கு நகரில் கழகத்தை வலுப்படுத் துவது, வளர்த்தெடுப்பது பற்றிய கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப் பட்டன .தமிழ்நாட்டில் இருந்து மலேசிய நாட்டில் பரப்புரை பயணம் மேற்கொண்டு இருக்கக்கூடிய கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரனுக்கு வரவேற்பு கூறினார்கள். நிகழ்வில் தேசியத் தலைவர் அண்ணாமலை, பெரியார் பெருந்தொண்டர் மருதமுத்து மேக்மெண்டின் நாராயணசாமி, பண்டாரயா கிளை துணைத் தலைவர் ரவீந்திரன் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர் தோழர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது.


No comments:

Post a Comment