தோழர்களுக்கு அரிய வாய்ப்பு - இதோ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

தோழர்களுக்கு அரிய வாய்ப்பு - இதோ!

பெரியார் பன்னாட்டமைப்பும், கனடாவின் மற்ற மூன்று பகுத்தறிவாளர் அமைப்புகளும் இணைந்து நடத்தும் மனிதநேய சமூகநீதி மாநாடு டொராண்டோ நகரில் இன்றும், நாளையும் (24, 25 ஆகிய இரு நாள்கள்) நடக்கவிருக்கிறது. 

இன்று (24.9.2022) மாலை சரியாக 6 மணிமுதல் 8.30 மணிவரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் மற்றும் கனடா வெளிநாட்டுப் பேராளர்களும்  உரையாற்றுகின்றனர்.

நாளை (25.9.2022  ஆம் தேதி- இந்திய நேரப்படி அதிகாலை 1.00 மணிமுதல் 1.15 மணிவரை)  தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்  சிறப்புரை ஆற்றுகிறார். உலகின் பன்னாட்டுப் பேராளர்கள் மாநாட்டில் அரிய உரையாற்றவிருக்கிறார்கள்.

முதலமைச்சரின் உரை மறு ஒளிபரப்பு மாலை 5.30 மணிக்கு (25.9.2022). https://youtube.com/c/periyartv

தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் - அதனைத் தொடர்ந்து ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆங்கில உரை, மற்ற நிறைவு நிகழ்வுகளையும் காணொலிமூலம் கேட்கவும், பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - இடம் பெரியார் திடல், சென்னை!

கண்டு களிக்க வாருங்கள் தோழர்களே!

- ஏற்பாட்டுக் குழு

நேரலை:https://tinyurl.com/humanismconference


No comments:

Post a Comment