பெரியார் பன்னாட்டமைப்பும், கனடாவின் மற்ற மூன்று பகுத்தறிவாளர் அமைப்புகளும் இணைந்து நடத்தும் மனிதநேய சமூகநீதி மாநாடு டொராண்டோ நகரில் இன்றும், நாளையும் (24, 25 ஆகிய இரு நாள்கள்) நடக்கவிருக்கிறது.
இன்று (24.9.2022) மாலை சரியாக 6 மணிமுதல் 8.30 மணிவரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் மற்றும் கனடா வெளிநாட்டுப் பேராளர்களும் உரையாற்றுகின்றனர்.
நாளை (25.9.2022 ஆம் தேதி- இந்திய நேரப்படி அதிகாலை 1.00 மணிமுதல் 1.15 மணிவரை) தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். உலகின் பன்னாட்டுப் பேராளர்கள் மாநாட்டில் அரிய உரையாற்றவிருக்கிறார்கள்.
முதலமைச்சரின் உரை மறு ஒளிபரப்பு மாலை 5.30 மணிக்கு (25.9.2022). https://youtube.com/c/periyartv
கண்டு களிக்க வாருங்கள் தோழர்களே!
- ஏற்பாட்டுக் குழு
நேரலை:https://tinyurl.com/humanismconference
No comments:
Post a Comment