முல்லை பெரியாறு பிரச்சினை தமிழ்நாடு முதலமைச்சர் - கேரள முதலமைச்சர் சந்திப்பு முல்லை பெரியாறு பிரச்சினை தமிழ்நாடு முதலமைச்சர் - கேரள முதலமைச்சர் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

முல்லை பெரியாறு பிரச்சினை தமிழ்நாடு முதலமைச்சர் - கேரள முதலமைச்சர் சந்திப்பு முல்லை பெரியாறு பிரச்சினை தமிழ்நாடு முதலமைச்சர் - கேரள முதலமைச்சர் சந்திப்பு

சென்னை,செப்3- தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவனந்தபுரம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேற்று  (2.9.2022) சந்தித்துப் பேசினார். இரு மாநிலங் களுக்கும் நலன் பயக்கும் திட்டங்கள் அடங்கிய அறிக்கையை அவரிடம் வழங்கியதுடன், முல்லை பெரியாறு பிரச்சினை குறித்தும் பேசினார்.

தென் மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒன் றிய  உள்துறை அமைச்சகம் சார்பில் முதலமைச்சர்கள் பங்கேற்கும் தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடத்தப் படுவது வழக்கம். அதன்படி, தென் மண்டல கவுன்சிலின் 30-ஆவது கூட்டம், கேரள தலைநகர் திருவனந்த புரத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா, கருநாடகா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி முதல மைச்சர்கள் பங்கேற் கின்றனர்.

கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற் காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை 11.40 மணிக்கு சென் னையில் இருந்து விமானத்தில் திருவ னந்தபுரம் சென்றார். முதலமைச்சருடன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, முதலமைச்சரின் செயலர்கள் த.உதயச் சந்திரன், அனுஜார்ஜ் ஆகியோரும் சென்றனர். முன்னதாக திருவனந்தபுரம் சென்றிருந்த தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ் ஆகியோர், விமான நிலையத்தில் முதல்வரை வரவேற்றனர்.

கோவளத்தில் சந்திப்பு

அதைத் தொடர்ந்து, நேற்று மாலை கோவளத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது ‘தி திரவிடியன் மாடல்’ என்ற நூலை கேரள முதலமைச்சருக்கு ஸ்டாலின் பரிசளித்தார். இந்த சந்திப்பின்போது, இரு மாநிலங்களுக்கும் நலன் பயக்கும் திட்டங்கள் குறித்த அறிக்கையை பினராயி விஜயனிடம் ஸ்டாலின் வழங்கினார்.

அத்துடன், முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்தி தேக்குதல், பேபி அணை புனரமைப்புக்கு அனுமதி அளித்தல், பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தம், நீராறு, கல்லாறு, ஆனைமலையாறு, சிறுவாணி, பாண் டியாறு - புன்னம்புழா மற்றும் நெய்யாறு திட்டங்கள் குறித்து இரு முதலமைச் சர்களும் விவாதித்துள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில், இருமாநில நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க பொதுப்பணித்துறை செயலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள், நதிநீர் திட் டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது, அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, முதலமைச்சரின் செய லர்கள் த.உதயச்சந்திரன், அனுஜார்ஜ் ஆகியோரும் உடன் இருந்தனர்.

கலை நிகழ்ச்சியில் பங்கேற்பு

இதைத் தொடர்ந்து ஓணம் பண்டிகையை முன்னிட்டு அங்கு நடந்த கலை நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரவு 

7 மணிக்கு சென்னை திரும்புகிறார்.


No comments:

Post a Comment