குஜராத்தில் பக்தர்கள் 6 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

குஜராத்தில் பக்தர்கள் 6 பேர் உயிரிழப்பு

அகமதாபாத்,செப்.3- குஜராத் தின் ஆரவல்லி மாவட்டத்தில் பக்தர்கள் மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் புகழ்பெற்ற அம்பாஜி கோயில் உள்ளது. அகமதாபாத்தில் இருந்து சுமார் 185 கி.மீ. தொலைவில், ராஜஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள இக்கோயில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைப் பயணமாக செல்வது வழக்கம்.

இந்நிலையில் ஆரவல்லி மாவட்டம், கிருஷ்ணபுரா என்ற கிராமத்தில் 1.9.2022 அன்று காலையில் இக்கோயி லுக்கு பக்தர்கள் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது வேகமாக வந்த ஒரு கார் மோதியது. இதில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். ஓட்டுநர் மீது  கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு குஜராத் முதலமைச்சர் புபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள் ளார். மேலும் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி அறிவிக் கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment