கிருட்டினகிரி, செப். 13- கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் (10-.9.-2022) சனிக்கிழமை மதியம் 2 மணி அளவில் காவே ரிப்பட்டினம் அடுத்த பையூரில் நடைபெற்றது.
இக்கூட்டம் கழக கிருஷ்ண கிரி மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் பெ.செல்வம், மேனாள் மாவட்டத் தலைவர் பெ. மதிமணியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் அண்ணா சரவணன் சிறப்புரை ஆற்றினார். பையூர் கிளைக் கழகச் செயலா ளர் வே.சரவணன் நன்றி கூறினார்
இக்கூட்டத்தில் காவேரிப் பட்டிணம் நகர தலைவர் பூ.இராஜேந்திர பாபு, கிருஷ்ணகிரி நகர தலைவர் கோ. தங்கராசன், பொதுக்குழு உறுப்பினர் தா. சுப்ரமணியம், காவேரிப்பட்டி னம் ஒன்றிய துணைத் தலைவர் சி. இராஜா, பர்கூர் ஒன்றிய செயலாளர் ரகுநாதன், காவேரிப் பட்டணம் ஒன்றிய பகுத்தறி வாளர் கழக தலைவர் அ.வெங் கடாசலம், பெரியார் பெருந் தொண்டர்கள் இராமசாமி, காவேரி, பையூர் கிளைக் கழகத் தலைவர் சி.இராஜா மற்றும் கழ கத் தோழர்கள் கலந்து கொண் டனர்
மேலும் 40 ஆவது பிறந்தநாள் காணும் பர்கூர் ஒன்றிய செயலா ளர் ரகுநாதனுக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் 1.
வருகின்ற செப்டம்பர் 17 தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கிருட் டினகிரி மாவட்டம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், படங்கள் வைத்து மாலை அணிவித்தும், பெரியார் பட ஊர்வலங்கள் நடத்தியும், இனிப்புகள் வழங்கி யும் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது
தீர்மானம் 2.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 60ஆம் ஆண்டு விடுதலை ஆசிரியர் பணியை போற்றும் வகையில் விடுதலை சந்தா சேர்ப்பு பணியில் முதல் கட்டமாக வழங்கியுள்ளோம். நமது மாவட்டத்திற்கு ஒதுக்கப் பட்ட இலக்கை இரண்டாம் கட்டமாக சேர்த்து அளிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 3.
கிருட்டினகிரி நகரில் நடை பெற்று வரும் பெரியார் மய்ய கட்டிட கட்டுமான பணிகளை விரைவாக ஒரு மாதத்தில் கட்டி முடிப்பது என தீர்மானிக்கப் படுகிறது
தீர்மானம் 4.
விடுதலை சந்தா சேர்ப்பில் ஈடுபட்டு உழைத்த அனைத்து கழகத் தோழர்களுக்கும் பாராட் டும் , விடுதலை சந்தாக்கள் அளித்த பொதுமக்கள் அனை வருக்கும் நன்றியை கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது
தீர்மானம் 5.
கீழ்க்கண்ட தோழர்கள் புதிய பொறுப்பாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.
பையூர் கிளைக் கழகம்
தலைவர்: சி.இராஜா
செயலாளர்: வே.சரவணன் இளைஞரணி அமைப்பாளர்: சிவபிரகாசம்
ஆகியோர் புதிய பொறுப்பா ளர்களாக நியமிக்கப்படுகிறார் கள்.
No comments:
Post a Comment