காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

 காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (24.9.2022) தொடங்கியது. காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் செய்யப்பட்டன. போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் 30 ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி பரிசீலனை நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 8 ஆம் தேதி கடைசி நாளாகும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் போட்டி யிட்டால் அக்டோபர் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து காங்கிரஸ் தலைமை அலுவலகங்களிலும் தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.


No comments:

Post a Comment