செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

செய்தியும், சிந்தனையும்....!

பேசுவது நட்டாவா?

கூட்டாட்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இல்லை.

            - ஜே.பி.நட்டா, பி.ஜே.பி. தேசிய தலைவர்

>> நாட்டுக்குத் தேவை ஒரே ஆட்சிதான் என்பவர்களா இதைப் பேசுவது?

பாடம் யாருக்கு...?

தி.மு.க.வுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். 

- அண்ணாமலை, தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர்

>> எத்தனை முறை பி.ஜே.பி.,க்கு தமிழ்நாட்டு மக் கள் பாடம் கற்பித்தார்கள் - பாடம் கற்கவில்லையே!

செய்தியாளர்களா, அதுமட்டும் வேண்டாம்!

பிரதமர் மோடி அனைத்துத் தலைவர்களையும் அடிக்கடி சந்திக்கவேண்டும். 

- வெங்கையா நாயுடு

>> செய்தியாளர்களை மட்டும் கண்டிப்பாக சந்திக்கக் கூடாது.

ஒரே மனிதர் மோடி மட்டுமே!

ஒரே நாடு, ஒரே இசை நூல் வெளியீடு.

>> இந்தியாவில் ஒரே மனிதர் நரேந்திர மோடி மட்டுமே என்று அறிவிக்காததுதான் பாக்கி.

No comments:

Post a Comment