பேசுவது நட்டாவா?
கூட்டாட்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இல்லை.
- ஜே.பி.நட்டா, பி.ஜே.பி. தேசிய தலைவர்
>> நாட்டுக்குத் தேவை ஒரே ஆட்சிதான் என்பவர்களா இதைப் பேசுவது?
பாடம் யாருக்கு...?
தி.மு.க.வுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.
- அண்ணாமலை, தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர்
>> எத்தனை முறை பி.ஜே.பி.,க்கு தமிழ்நாட்டு மக் கள் பாடம் கற்பித்தார்கள் - பாடம் கற்கவில்லையே!
செய்தியாளர்களா, அதுமட்டும் வேண்டாம்!
பிரதமர் மோடி அனைத்துத் தலைவர்களையும் அடிக்கடி சந்திக்கவேண்டும்.
- வெங்கையா நாயுடு
>> செய்தியாளர்களை மட்டும் கண்டிப்பாக சந்திக்கக் கூடாது.
ஒரே மனிதர் மோடி மட்டுமே!
ஒரே நாடு, ஒரே இசை நூல் வெளியீடு.
>> இந்தியாவில் ஒரே மனிதர் நரேந்திர மோடி மட்டுமே என்று அறிவிக்காததுதான் பாக்கி.
No comments:
Post a Comment