இப்போதாவது புரிகிறதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 16, 2022

இப்போதாவது புரிகிறதா?

விடிந்ததும் விழித்ததும்

நிலைத்ததும் நிமிர்ந்ததும்

எழுந்ததும் நடந்ததும்

கண்டதும் கடந்ததும்

சிந்தித்ததும் சீரமைத்ததும்

துணிந்ததும் தூளாக்கியதும்

வெட்டியதும் கட்டியதும்

கற்றதும் பெற்றதும்

வெறுத்ததும் விரும்பியதும்

அறிந்ததும் அழித்ததும்

ஆண்டதும் மீண்டதும்

எருவானதும் உருவானதும்

அரியணை ஏறியதும்

ஆரியம் அலறியதும்

தமிழ் தழைத்ததும்

தலைமை ஏற்றதும்

தமிழ்நாடு கண்டதும்

திராவிடம் வென்றதும்

யாரால்? யாரால்?

பெரியாரால்... பெரியாரால்...

பேதைகள் சிலர் கேட்கிறார்கள்

பெரியார் யாரென்று?

அவரென்ன செய்தாரென்று?

பெரியார் உனக்கு

முகவரி தந்தவர்

முன்னெழுத்தாய் ஆனவர்

அவரில்லை என்றால்

உன்பிறப்பே கேள்விக்குறி!

மூடனே!

இப்போதாவது புரிகிறதா?

பெரியார் யாரென்று.

- முனைவர் க.அன்பழகன்

கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர், 

திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment