திருச்சி மாவட்டம் முழுவதும் பெரியார் பிறந்த நாள் விழா கழகக் கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

திருச்சி மாவட்டம் முழுவதும் பெரியார் பிறந்த நாள் விழா கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

திருச்சி, செப். 13- 11.9.2022.காலை.10.00.மணி அளவில் திருச்சி மண்டல தலைவர் ப.ஆல்பர்ட் தலைமையில் திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் முன்னிலையில் திருச்சி மாவட்ட கழக கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது

17.9.2022.அன்று நம் இனத்தின் தலைவர் தந்தை பெரியார் அவர் கள் பிறந்தநாள் அன்று காலை அவரவர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்திவிட்டு 9.30.மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு வந்து மாலை அணிவித்து அனைவரும் திருவரங்கம் பெரியார் சிலைக்கு வந்து சேர்ந்து  வெடி முழக்கத்தோடு மேளதாளத்தோடு விண் அதிரும் அளவிற்கு மு£க்கங்கள்  எழுப்பி மாலை அணிவித்து பிறகு திருவரங் கம் திருவானைக்காவல் பகுதிகளில் 30.க்கும் மேற்பட்ட இடங்களில் கழக கொடி ஏற்றப்படும்  என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கலந்துக்கொண்டோர்.

இக்கூட்டத்தில் மாவட்ட செய லாளர் இரா.மோகன்தாஸ். மாவட்ட இளைஞர் அணி தலைவர் தேவா, மாநகர தலைவர் ச.துரைசாமி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மகாமணி,  திருவரங்கம் நகர தலைவர் சா.கண்ணன், திரு வெறும்பூர் ஒன்றியசெயலாளர் தமிழ்சுடர், காட்டூர் கிளை தலை வர் அ.காமராஜ், காட்டூர் கிளை செயலாளர் சங்கிலி முத்து, சோமர சன்பேட்டை நற்குணம், மாநகர அமைப்பாளர்  சி.கனகராஜ், மாவட்ட மாணவர் கழக செயலா ளர் அறிவு சுடர், திருநாவுக்கரசு, திருவரங்கம் சீனிமுத்தையா, அர வானூர் பிரவீண் குமார், அல்லித் துறை கருப்பு கோகுல், அல்லித் துறை சுரேஸ்கண்ணன், மாநகர தோழர் கோபாலகிருட்டினன், பெரியார் கல்லூரி குமரேசன்.ஆகி யோர் கலந்து கொண்டு சிறப்பித் தனர்.

No comments:

Post a Comment