கரூர், செப். 13- கரூர் மாவட்ட கழ கம் சார்பில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட மாவட்டத் தலை வர் குமாரசாமி தலைமையில் பெரியார் உணர்வாளர்கள் தமிழ்ப் பற்றாளர்கள் இணைந்து நடத்துவது என கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டன.
1).தந்தை பெரியாரின் திரு வுருவப்படத்தை கையில் ஏந்தி கரூர் திருமா நிலையூரில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மற்றும் லைட் டோஸ்தியேட்டர் கார் னரில் உள்ள தந்தை பெரியா ரின் சிலைக்கு மாலை அணிவித் தும் அங்கிருந்து ஊர்வலமாக திண்டுக்கல் சாலை வழியாக கரூர் பேருந்து நிலையம் அரு கில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் பிரமாண்ட படத் திற்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்படுகின்றன.
2).தந்தை பெரியார் பிறந்த நாள் ஊர்வலத்தில் சிலம் பாட்டம் மேளதாளத்துடன் வானவேடிக்கை நிகழ்ச்சியுடன் ஊர்வலம் சிறப்பான முறையில் கொண்டாடப்படுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட் டன.
3).தமிழ்நாடு அரசு தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததற்கு இக்கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும் பாராட்டையும் தெரி வித்துக் கொள்வது என தீர் மானம் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்ட துணைச் செயலாளர் வே ராஜு, கரூர் மாவட்ட கலை இலக்கிய பேரவை செயலாளர் ராமசாமி சமூக செயற்பாட்டாளர் காம ராஜ் மற்றும் விடுதலை சிறுத் தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, ஆதி தமிழர் பேரவை மற்றும் ஒத்த கருத்துள்ள தமிழ் உணர்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment