ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 டெக்கான் கிரானிக்கல் அய்தராபாத்:

* பாஜக பின் வாசல் வழியாக ஆட்சிக்கு வந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கிறது என தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் சாடல்.

* குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு விசாரிக்க முடிவு.

டெக்கான் கிரானிக்கல் சென்னை:

* சில மாநில ஆட்சிகளை போல் குடிசைகளை தார்ப்பாலின் கொண்டு மூடி மறைக்கும் ஆட்சி அல்ல எங்களுடைய திராவிட மாடல் ஆட்சி என தமிழ்நாடு முதலமைச்சர் பேச்சு

தி டெலிகிராப்:

* ராகுல் காந்தி மேற்கொள்ளும் நடைபயணம் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை வீழ்த்தும் என்பதை குறிக்கும் வகையில் காக்கி ஷார்ட்ஸ் (ஆர்.எஸ்.எஸ். சீருடை) தீப்பிடிக்க தொடங்குவது போல படத்தை காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* தந்தை பெரியார் சிலையின் கீழ் உள்ள கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்கக் கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது.

* தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான தமிழ்நாடு மாநில ஆணையத்திற்கு 48 பணியிடங்களுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆணை யத்தை திறம்படச் செயல்படுத்துவதற்காக ரூ.4.2 கோடி அரசு அனுமதித்துள்ளது.

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment