எல்.அய்.சி.யில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

எல்.அய்.சி.யில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

சென்னை, செப். 17- தந்தை பெரியார் அவர்களு டைய 144ஆவது பிறந்த நாள் விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தென் மண்டல எல். அய்.சி. கட்டடத்தில், 16.09,2022 வெள்ளிக் கிழமை பிற் பகல் 1 மணி முதல் 2 மணி வரை எல்.அய்.சி. பிற்படுத் தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கத்தின் சார்பாக மிகச் சிறப்பாக கொண் டாடப்பட்டது. 

சென்னை கோட்டம் 1இன் தலைவர் எஸ்.முரளி அவர்கள் வரவேற்புரை யாற்றி நிகழ்ச்சியினை தொடக்கிவைத்தார்.  நிகழ்ச்சிக்கு  எம்.எல். ஆண்டனி தலைமையேற் றார். தனது தலைமையு ரையில் பெரியார் பிறந்த நாளின் அவசியத்தையும் சிறப்பினையும் எடுத்து ரைத்தார்.

தந்தை பெரியாரின் உருவப் படத்திற்கு நலச் சங்கத்தின் அகில இந்திய மேனாள் தலைவர் திரு.சனார்த்தனம், தயாளன், எஸ்.சி, எஸ்.டி. நலச் சங்கத்தின் மேனாள் தலைவர் இரா.மணி  மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்கள்.

விழாவில் கலந்து கொண்ட ஊழியர்கள் அனைவரும் சமூக நீதி உறுதிமொழி ஏற்றனர்.

எஸ்.சி., எஸ்.டி. நலச் சங்கத்தின் தலைவர் சனார்த்தனன், இரா.மணி, தென் மண்டல  மேனாள் தலைவர் அ.யோகநாதன்  மற்றும் கல்விக்கரசி ஆகியாரும் உரையாற்றினார்கள்.  உரையாற்றிய தோழர் கள் அனைவரும் தந்தை பெரியாரின் தொண்டின் சிறப்புக்களையும், இன் றைய கால கட்டத்தில் பெரியாரின் அவசியத் தேவைகள் குறித்தும் உரையாற்றினார்கள். பெண்களின் முன்னேற் றம், இட ஒதுக்கீடு, பகுத் தறிவு போன்ற துறை களில் தந்தை பெரியாரின் பணிகள் குறித்தும் உரை யாற்றினார்கள்.

விழாவில் எஸ்.சி, எஸ்.டி. நலச் சங்கத்தின் ஊழியர்க ளும், பிற்படுத்தப்பட் டோர் ஊழியர் நலச் சங் கத்தின் ஊழியர்களும் திர ளாக கலந்து கொண்டனர். 

சிறப்பாக நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்வினை  கோட் டப் பொருளாளர் என். கோட்டீசுவரன், கோட்ட நிர்வாகிகள் சகாயராணி, பெருமாள், சந்தானம், மதிவாணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 

தென் மண்டல நிர் வாகிகள் பரிமளா,  கிளா டிஸ் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.  அய்யா வின் பிறந்த நாள் நிகழ் வில் கலந்து கொண்ட அனை வருக்கும் இனிப்பு வழங் கப்பட்டது. 

கோட்டப் பொதுச் செயலாளர் எஸ். இளையபெருமாள் நன்றியுரையாற்றினார். 

No comments:

Post a Comment