வல்லம், செப். 17- 15.09.2022 அன்று பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இயங்கும் இந்திய பொறியாளர் நிறுவனத்தின் கிளை மற்றும் இந்திய பொறியாளர் நிறுவனம் தஞ்சாவூர் மய்யமும் இணைந்து நடத்திய 55ஆவது பொறியாளர் தின விழாவில் முனைவர். சி. செந்தமிழ்குமார் வரவேற்புரை யாற்றினார்.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். ஷி. வேலுசாமி தலைமை உரையில் காலத்தின் தேவையாக இருக்கும் ஸ்மார்ட் பொறியியல் பற்றி எடுத்துரைத்தார்.
பொறியாளர். கி.ஆல்பர்ட் சுரேஷ், செயலாளர், கட்டடப் பொறியாளர் சங்கம் தஞ்சாவூர் நீர்வளம் மற்றும் பிற துறைகளில் கட்டடப் பொறியா ளரின் பங்களிப்பு குறித்து விவ ரித்தார்.
இந்திய பொறியாளர் நிறு வனம் தஞ்சாவூர் மய்யத் தலை வர், பொறியாளர்.ஜெயக்குமார், எதிர்காலத்தில் பொறியாளர்க ளின் பங்களிப்பு குறித்து உரை யாற்றினார்.
கட்டடப் பொறியாளர் சங் கம் தஞ்சாவூர் (CEAT) தலைவர் ஆறுமுகம், எதிர்காலத்தில் ஸ்மார்ட் பொறியியல் பற்றி பொறியாளர்களின் குறிப்பிடத் தக்க பங்கை எடுத்துரைத்தார்.
பொறியியல் சமூகத்தில் சாதனை படைத்த ஆறு பொறி யாளர்கள், நான்கு பேராசிரி யர்கள் மற்றும் பத்து பொறியியல் மாணவர்களுக்கான விரு துகளை பல்கலைக்கழகத் தின் பதிவாளர் முனைவர் சிறீவித்யா வழங்கினார்.
விழாவின் நிறைவாக கட்டட வியல் துறையின் உதவிப் பேராசி ரியர் முனைவர் சந்தோஷ் நன்றி யுரை வழங்கினார்.
No comments:
Post a Comment